rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

Android ஒரு பார்வை


 

android என்றவுடன் புதுமை என்று நினைக்க வேண்டாம் இது ஒரு லினக்ஸ் சார்ந்த ஒரு mobile operationg சிஸ்டம் இது நோக்கியா மற்றும் அனைத்து மொபைல் product களில் இது தற்பொழுது இயங்குகின்றது இது google நிறுவனத்தின் ஒரு project ஆகும்.


இது எதிர்கால mobile operating system இதுவே. இது அற்புதம் அருமை நிறைய libaries மற்றும் software development kit களை support செய்யும் இதனை apache licence இன் கீழ் இது வழங்க படுகின்றது.வீடியோ வை record செய்ய மற்றும் வீடியோ வை அணைத்து mode களிலும் பார்க்க முடியும் ப்ளுடூத் device களை குறிப்பிட்ட தூரத்தில் இணைக்க முடியும் google சார்ந்த அனைத்து product களை support செய்யும் மேலும் animated transition களை support செய்யும். இது kernel 2 .6 .29 இல் இயங்குகின்றது integrated camera மற்றும் CDMA technology யும் support செய்யும்.

விரைவான hardware access பல வகையான screen resolution மற்றும் wvga திரையை சப்போர்ட் செய்கின்றது. இது பிளாஷ் லைட் camera நை support செய்கின்றது மற்றும் ஜாவா வை support செய்கின்றது புதிய technology யும் புதிய புதிய மீடியா format file களை இது play செய்யும்.

குதிரைக்கானும் குருவும்!!

குதிரைக்கானும் குருவும் :
 
1251790573_4-2.jpg 

ஒரு குரு இருந்தார்.முற்றும் துறந்தவர்.எல்லாம் கற்றவர்.அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள்.கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள்.குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை.கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.குரு வந்த போது யாருமில்லை.பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்.அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
அவன் சொன்னான்,''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்.நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.புல்லு வைக்கப் போகும் போது ,எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க ,ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும் ,நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.''

படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு.
 
அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு,அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார்.தத்துவம்,மந்திரம்,பாவம்,புண்ணியம்,சொர்க்கம்,நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.பிரசங்கம் முடிந்ததும்,எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால்,அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன்.முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்,''என்றான் அவன்.

அவ்வளவு தான்! குரு அதிர்ந்து விட்டார்.