rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

கொள்ளை கும்பல் "AMWAY"

கொள்ளை கும்பல் "AMWAY" - ☼ தொப்பிதொப்பி ☼


http://www.annoncevous.com/adpics/job_opening_for_direct_sale233.jpg
                                                        
"AMWAY "  இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு  அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.  இந்த நிறுவனத்தில்  உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது  தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம்  முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை  சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம்  ஒன்று "இந்த தொழில்  செய்தால் நீ  செல்வந்தன்  ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக  கொள்ளையடிக்கும்  கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY"  இதுவரை தமிழ்நாட்டில் பல MLM  நிறுவனங்கள்  பலவிதமான வித்தைகளைக்காட்டி  கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY  நிறுவனம் கொஞ்சம்  வித்தியாசமானது,  சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து  பொருட்களை  இறக்குமதி  செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு  வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும்  அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன.  ஆனால்   நம் இந்தியா  அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு  வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம்.   இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும்   FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.


FMCG  பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய  இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த  பொருட்களை விற்பனை செய்ய அந்நிய  நிறுவனத்துக்கு   அரசு  அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது  PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.  


பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:  
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள  அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள்  தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE  SECTOR) என்று சொல்வார்கள்.  அந்த DEFENCE  SECTOR  என்று சொல்லப்படும்  செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான்  இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL  செக்டோர்கள்.  இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த  AMWAY நிறுவனமும்.  ஆனால் இது  இந்திய  நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம்.   நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை.  இப்படி இருக்கும்போது இந்த AMWAY  நிறுவனம் DIRECT SALE  என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால்  DEFENCE SECTOR என சொல்லப்படும்  இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில்  நமது நாட்டில்  பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால்  பாதிப்பு  முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார்  என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.



இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.


இதுவரை நான் எழுதியதெல்லாம்    நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள்,  இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.



ஏமாற்றும் வழிகள்: 
இந்த நிறுவனத்தில்  யாரும்  பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ  அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ  அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு  ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய்  ஆம்வே நிறுவனத்தால்  சம்பாதிக்கிறார்  என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.


நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது,  இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று  சொல்லிதான்  இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று  ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது  நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை  ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது. 


►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம்  எல்லாம் உட்பட).


►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)


மேலும் ஆம்வே நிறுவன  பொருட்களின் விலைகள்.

TOOTHBRUSH(1)                   - 19 ரூபாய்
HAIR OIL(500 ML)                 - 95 ரூபாய்
SHAVING CREAM(70G)          - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE)             -400 ரூபாய்         
FACE WASH                           -229  ரூபாய்
PROTIEN POWDER(1KG)      - 2929 ரூபாய்


மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு  நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE))  விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.


 நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE.  ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய  நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு  4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால்  இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?
  
► ஆம்வே  நிறுவனத்தில் ஒருவர்  இணைய வேண்டும் என்றால்  995 ரூபாய் கட்ட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே  நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)


►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)


► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட  3000 ரூபாய் லாபம் வருகிறது.


இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:


►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது  கட்டிய தொகை 995 ரூபாய். 

►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .

►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே  உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.


இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.


 ►ஒருவன்  ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர்  இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995  ரூபாய்)


                                     100 x 995 = 99500 ரூபாய்


இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும்  இதை 100 PV என்று சொல்வார்கள்.


                                   3000  x 100 = 300000 ரூபாய்
                                
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே  நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய்.  நிறுவனத்துக்கு  ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).


இவ்வளவு  கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE)  சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.


 இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால்  இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள்  அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர்.  ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது.  அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.


300 PV = 16,500 ரூபாய்  (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)

இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள்  வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.


     லட்ச்சங்களையும்,   கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.  ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்)  கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.


இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை  உணரும் வரைதான்.



இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
 தயவு செய்து இந்த பதிவை   உங்கள் நண்பருக்கோ அல்லது  உறவினருக்கோ இந்த  பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள்.  இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.

Android ஒரு பார்வை


 

android என்றவுடன் புதுமை என்று நினைக்க வேண்டாம் இது ஒரு லினக்ஸ் சார்ந்த ஒரு mobile operationg சிஸ்டம் இது நோக்கியா மற்றும் அனைத்து மொபைல் product களில் இது தற்பொழுது இயங்குகின்றது இது google நிறுவனத்தின் ஒரு project ஆகும்.


இது எதிர்கால mobile operating system இதுவே. இது அற்புதம் அருமை நிறைய libaries மற்றும் software development kit களை support செய்யும் இதனை apache licence இன் கீழ் இது வழங்க படுகின்றது.வீடியோ வை record செய்ய மற்றும் வீடியோ வை அணைத்து mode களிலும் பார்க்க முடியும் ப்ளுடூத் device களை குறிப்பிட்ட தூரத்தில் இணைக்க முடியும் google சார்ந்த அனைத்து product களை support செய்யும் மேலும் animated transition களை support செய்யும். இது kernel 2 .6 .29 இல் இயங்குகின்றது integrated camera மற்றும் CDMA technology யும் support செய்யும்.

விரைவான hardware access பல வகையான screen resolution மற்றும் wvga திரையை சப்போர்ட் செய்கின்றது. இது பிளாஷ் லைட் camera நை support செய்கின்றது மற்றும் ஜாவா வை support செய்கின்றது புதிய technology யும் புதிய புதிய மீடியா format file களை இது play செய்யும்.

குதிரைக்கானும் குருவும்!!

குதிரைக்கானும் குருவும் :
 
1251790573_4-2.jpg 

ஒரு குரு இருந்தார்.முற்றும் துறந்தவர்.எல்லாம் கற்றவர்.அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள்.கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள்.குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை.கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.குரு வந்த போது யாருமில்லை.பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்.அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
அவன் சொன்னான்,''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்.நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.புல்லு வைக்கப் போகும் போது ,எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க ,ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும் ,நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.''

படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு.
 
அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு,அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார்.தத்துவம்,மந்திரம்,பாவம்,புண்ணியம்,சொர்க்கம்,நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.பிரசங்கம் முடிந்ததும்,எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால்,அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன்.முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்,''என்றான் அவன்.

அவ்வளவு தான்! குரு அதிர்ந்து விட்டார்.

Power Of Tamil

 

 

 

 


 


 



நீங்களும் கலெக்டர் ஆகலாம்





நீங்களும் கலெக்டர் ஆகலாம்


ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ். போன்ற அரசு உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளை அறிந்து கொள்ளும் முன் ஒரு செய்தி. இத்தேர்வு குறித்த சில அடிப்படையான விவரங்களைத் தெரிந்து கொள்வது முக்கியம்.


பல்வேறு வகையான பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவர். நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களின் 12 மடங்கு எண்ணிக்கை அளவுக்கு முதன்மைத் தேர்வில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதிலிருந்து ஒரு காலியிடத்துக்கு 3 பேர் என்ற அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்குப் போட்டியாளரின் எண்ணிக்கை அமையும்.

முதல்நிலைத் தேர்வு என்பது போட்டியாளரின் எண்ணிக்கையை முறைப்படுத்தி முதன்மைத் தேர்வுக்குத் தகுதியானவர்களைக் கண்டறிய நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இறுதி வெற்றிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. முதன்மைத் தேர்வுக்கு 2,000 மதிப்பெண்களும் நேர்முகத் தேர்வுக்கு 300 மதிப்பெண்களும் ஆக மொத்தம் 2,300 மதிப்பெண்களும் தேர்ச்சிக்காகக் கணக்கில் கொள்ளப்படும்.

பல்வேறுபட்ட துறைகளில் படித்து வரும் மாணவர்களுக்கு வாய்ப்பாக சிவில் சர்வீசஸ் தேர்வில் பரந்த அளவிலான விருப்பப் பாடங்கள் உள்ளன. அவற்றில் முதல்நிலைத் தேர்வுக்கென்று ஒன்றும் முதன்மைத் தேர்வுக்கென்று இரண்டுமாக இரு விருப்பப் பாடங்களைப் போட்டியாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்வதுதான் தேர்வுக்கான ஆயத்தங்களின் தொடக்க நிலையும் மிக முக்கியமான அம்சம் ஆகும். விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்.

தேர்வு செய்யும் விருப்பப் பாடத்தில் பரிச்சயம் மற்றும் அப்பாடத்தில் கல்வியறிவு. அடிப்படை ஈடுபாடு பாடத்திட்டத்தின் அளவு அப்பாடத்தில் வழக்கமாக அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்பு. பாடத்திட்டத்துக்குத் தேவையான நூல்கள் கிடைக்கும் தன்மை.

முதல்நிலைத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளிலிருந்து இப்போது தொடங்கலாம். முதல்நிலைத் தேர்வில் விருப்பப் பாடங்களுக்கு 300 மதிப்பெண்களும் பொது அறிவுப் பாடத்துக்கு 150 மதிப்பெண்களும் உள்ளன. விருப்பப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் உள்ளதால் அப்பாடத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.

பல்வேறு பதில்களிருந்து ஒன்றைத் தெரிவு செய்திட வேண்டிய வினாமுறை என்பதால் ஆயத்த நிலையில் ஒரு பாடத்தின் அனைத்து அம்சங்களையும் ஆழ்ந்து அறிய வேண்டியது முக்கியம். முதலாவது சுற்றுத் தயாரிப்புக்கு 3 மாதங்களும் திரும்ப ஒருமுறை திருப்பிப் பார்த்துப் படிக்க ஒரு மாதமும் தேவை.

முதல்நிலைத் தேர்வுகளுக்கான ஆயத்தின்போது தொடக்கத்திலேயே கேள்விகளுக்கு விரைவாகப் பதில் எழுதிடப் பழகுதல் மிக முக்கியமான ஒன்றாகும். முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் பெற்று அவற்றுக்கு விடையளித்துப் பார்க்க வேண்டும்.

இம்முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆயத்தப் பணிகளின் போக்கை நெறிப்படுத்துவதுடன் தேர்வுகளில் விடையளிப்பதை மேம்படுத்தவும் உதவும். முதல்நிலைத் தேர்வில் உள்ள பொதுப்பாட வினாத்தாள் பரவலான பாடத்திட்டத்தைக் கொண்டது.

எனவே, தேர்வாளர்கள் முக்கியமான பகுதிகளை இனங்கண்டு அவற்றில் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். பொதுஅறிவுத் தாளில் கணிதத்திறன் தொடர்புடைய வினாக்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற வாய்ப்புள்ளது. எனவே, அப்பகுதியில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் விடையளிக்க நல்ல பயிற்சி பெற வேண்டும்.

முதன்மைத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் முதல்நிலைத் தேர்வு முடிந்த மாத்திரத்திலேயே தொடங்கப்பட வேண்டும். முதல்நிலைத்தேர்வு முடிவுற்ற தேதிக்கும் அத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதிக்கும் இரு மாதங்கள் இருக்கும். இக்கால அவகாசத்தை முதன்மைத் தேர்வின் இரண்டாவது விருப்பப் பாடத்துக்கான ஆயத்தப் பணிகளுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்தால் அடுத்த இரு மாதங்களைப் பொதுப் பாடங்கள் மற்றும் இன்னொரு விருப்பப் பாட ஆயத்தப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியும். தேர்வுக்கு முந்தைய கடைசி ஒரு மாதத்தை அனைத்துப் பாடங்களையும் திரும்பப் பார்த்துப் படிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதன்மைத் தேர்வுக்கு அதிகமான மதிப்பெண்கள் உள்ளதால் அத்தேர்வுக்கான ஆயத்தப் பணிகளும் மிக முக்கியமானதாகும். பொதுவாகப் போட்டியாளர்கள் ஆயத்தப் பணிகளை முடித்த பிறகு தயார்படுத்திய பாடங்களை ஒருமுறை திரும்பப் பார்ப்பதற்கு நேரமின்றி கஷ்டப்படுவதுண்டு. ஆயத்தப் பணிகளில் தொடக்க நிலையிலிருந்தே குறிப்புகள் எடுத்து வந்தால் இதைத் தவிர்க்கலாம்.

அத்துடன் பாடத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை மேம்படுத்தவும் இது உதவும். மேலும் முக்கியமாக ஆயத்தம் செய்த பாடங்களைத் திரும்பப் பார்க்கும்போது நேரத்தைச் சேமிக்கும் வகையில் முழுப்பாடங்களையும் பார்க்கத் தேவையின்றி எடுத்த குறிப்புகளைப் பார்த்தாலே போதும் என்ற நிலைக்கும் உதவும்.

முதன்மைத் தேர்வில் பொதுப்பாடத் தாள் மிக அதிகமான பாடத்திட்டங்களைக் கொண்டது ஆகும். எனவே, ஒவ்வொரு பாடத்தையும் அதன் பகுதிகள் அனைத்தையும் முழுமையாகவும் ஆழமாகவும் தயாரிப்பது கடினம் என்பதை உணர்ந்து கொள்வது முக்கியம்.

திரும்பத் திரும்ப வினாக்கள் கேட்கப்படும் பகுதியை மிகக் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும். பிற பகுதிகளைப் பொருத்தவரையில், அப்பாடங்களில் அடிப்படை விஷயங்களை உணர்ந்து அது தொடர்புடைய அண்மைக்கால குறிப்பிடத்தக்க சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அறிந்துகொண்டு அதில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.

முதன்மைத் தேர்வில் கட்டுரைத்தாள் என்பது ஒரு தனித்தன்மை மிக்கது. பொதுத் தாள்களுக்குப் படிப்பது கட்டுரைத்தாளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரையை எழுதிப் பார்ப்பது சிறந்த பயிற்சியாக அமையும். நல்ல மதிப்பெண்களும் பெறலாம்.

திட்டமிடுதலிலும் கட்டுரைத் தரப்போகும் செய்திகளைக் குறிப்பெடுப்பதிலும் செய்திகளை அடுத்தடுத்து தரும் முறைகளை வகுப்பதிலும் செய்திகளைப் பகுப்பாய்வு செய்வதிலும் தீர்வு வழங்குவதிலும் கட்டுரை எழுதத் தொடங்கும் முன்னரே நேரத்தை செலவிட வேண்டும்.

வெற்றி பெறுவதற்கான அடிப்படை விஷயம் தொடர்ச்சியான கடின உழைப்பு.இத்தேர்வு முறையில் மொத்த காலஅளவு ஏறக்குறைய ஓராண்டு. இதைக் கருத்தில் கொண்டு இக்காலம் முழுவதும் கடினமாக உழைக்க வேண்டும். இத்தகைய சரியான வழியிலான கடின உழைப்பு எதிர்காலத்தில் வாழ்வில் உயர்வைத் தரும் என்பதில் துளியும் ஐயமில்லை

--

நேர்முகத் தேர்வுகள் எதிர்கொள்வது எப்படி?


ப்பன் பண்ணா...

"எக்ஸ்கியூஸ்மி சார், உள்ளே வரலாமா?"

"யெஸ்!"

"குட் மார்னிங் சார். என் பெயர் ஜீவா!"

"உட்காருங்க!"

"தேங்க் யூ சார்!"

"ம்... உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க..."

"நான்..."

கட்... கட்... கட்! நண்பர்களே... நேர்முகத் தேர்வு இப்படித்தான் இருக்கும். கேட்ட கேள்விக்கு ஜாலியாகப் பதில் சொல்லிவிட்டு வேலை வாங்கி விடலாம் என்று நினைத்தால்... ஸாரி!

உலகம் உங்களை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ளாது.

இப்போது அதே ஜீவா. வேறு கம்பெனி.

"எக்ஸ்கியூஸ்மி சார்... உள்ளே வரலாமா?"

"யார் நீ... இங்கே எதற்காக வந்தாய்?"

"சார்... இன்டர்வியூ..."

"என்ன இன்டர்வியூ... எதற்காக உனக்கு வேலை கொடுக்க வேண்டும்?"

"சார்... அது வந்து... நான்..."

ஜீவா படபடக்கிறான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. தயார் செய்துகொண்டுபோன ரெடி மேட் பதில்கள் சடுதியில் மறந்து போகின்றன. முகம் வெளிறி வெளியே வருகிறான்.

இப்படியும் சில நேர்முகத் தேர்வுகள் இருக்கும். நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பித்தது முதல், நிறுவனத்தைப்பற்றி ஓர் ஆய்வுப் படிப்பே மேற்கொண்டு முடித்தது வரை அனைத்தையும் மிக அழகாகச் செய்பவர்கள், இறுதியில் கோட்டை விடுவது நேர்முகத் தேர்வு எனப்படும் நெருப்பு வளையத்துக்குள்தான். ஆனால், இன்னபிற தகுதிகளில் நீங்கள் முழுமையானவராக இல்லாவிட்டாலும், மிக இயல்பாக எந்தப் பயமும் பதற்றமும் இல்லாமல் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டால், அதுவே உங்கள் வருங்காலத்துக்கான வாசலைத் திறக்கும் என்ற நிதர்சன நிஜம் தெரியுமா?

ஓ.கே. இப்போது என்னென்ன வகையான இன்டர்வியூக்கள் இருக்கின்றன? அவற்றை எப்படி எதிர்கொள்வது? வழிகாட்டுதல்கள் இங்கே...

"நீங்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களோ, அதற்கு ஏற்றாற்போலவும், நீங்கள் செல்லும் நிறுவனங்களுக்கு ஏற்றாற்போலவும் பலவிதங்களில் நேர்காணல்கள் அமையும். இன்று பெரும்பாலான இளைஞர்கள் செய்கிற தவறு, எல்லாவிதமான நிறுவனங்களுக்கும் வேலைகளுக்கும் ஒரே மாதிரியான நேர்காணல் கள் இருக்கும் என்று நினைப்பதுதான்.

நீங்கள் செல்லப் போகும் நிறுவனத்தில் இந்த வகையான நேர்காணல்தான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தால், அந்த வகைக்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில், 'நீங்கள் எந்த வகையான நேர்காணல் முறையைப் பின்பற்றப்போகிறீர்கள்?' என்று அந்த நிறுவனத்தினரிடமே கேட்பதில் தவறு இல்லை.

விதிகளை அறிந்துகொண்டு விளையாடும் போட்டி போன்றதுதான் இதுவும். யார் வெற்றி பெறுகிறாரோ அவருக்கு வேலை!" என்று உற்சாகமாகத் தொடங்குகிறார் 'மஃபாய்' நிறுவனத்தின் மனித வளத் துறைத் தலைவர் நெடுமாறன். கார்ப்பரேட் உலகில் பின்பற்றப்படும் சில இன்டர்வியூ வகைகளை அவர் பட்டியலிடுகிறார்.

ஸ்க்ரீனிங் இன்டர்வியூ

ம்பந்தப்பட்ட பதவிக்கு ஏற்ற குறைந்தபட்சத் தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிவதுதான் இந்த 'ஸ்க்ரீனிங் இன்டர்வியூ'வின் நோக்கம். இன்றைக்குப் பெரும்பாலான நிறுவனங்கள் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் 'ரெஸ்யூம்'களைக் (தன்விவரக் குறிப்பு) கணினிகொண்டே பிரித்து எடுக்கிறார்கள். ஆகவே, எப்போதும் 'டிஜிட்டல் ரெஸ்யூம்' ஒன்றை 'ஸ்க்ரீனிங் ஃப்ரெண்ட்லி'யாக வைத்திருப்பது முக்கியம். சமயங்களில் உங்களின் 'ரெஸ்யூம்'களை வேறு ஃபார்மட்டில் தயாரித்து அனுப்பும்போது, அந்த நிறுவனத்தில் அத்தகைய ஃபார்மட் இல்லாதுபோகிறபட்சத்தில் தகுதி இருந்தும் உங்கள் 'ரெஸ்யூம்' எடுபடாமல் போகலாம்.

சில நிறுவனங்களில் மனிதர்கள் 'கேட் கீப்பர்'களாக இருப்பார்கள். அவர்கள் கேட்கிற கேள்விக்கு என்ன பதில் தர வேண்டுமோ அதை மட்டும் சரியாகச் சொல்லிவிட்டு, அடுத்த கட்டத்துக்குப் போகலாம். இங்கு உடல் மொழி, அதீத பணிவு இவை எல்லாம் தேவையே இல்லை. ஒரு காலி இடத்துக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிகிற சமயத்தில், உங்களின் 'ரெஸ்யூம்'களை மிக ஆழமாக ஆராய்வார்கள். சிறு சந்தேகம் தென்பட் டால்கூட, உங்களை நீக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல உங்களையும் கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். சலிக்காமல் நேரிடையான பதில்களை மட்டுமே அளிக்கவும். 'ஓவர் குவாலிஃபைட்' ஆக இருக்கிறீர்களா என்பது முதல் உங்கள் பணி அனுபவங்கள் வரை அனைத்தையும் வடிகட்டுவதுதான் இந்த முதல் வகை நேர்காணல்!

சில டிப்ஸ்கள்...

உங்களின் தகுதி, திறமைகளை 'ஹைலைட்' செய்யுங்கள்.

சுற்றி வளைக்காமல் நேரிடையான, தேவையான பதில்களை மட்டும் அளிக்கவும்.

சம்பளம்பற்றிப் பேசும்போது 15,000 ரூபாய், 20,000 ரூபாய் என்று நிர்ணயித்த ஒரு தொகையைச் சொல்வதைவிடவும், '12 முதல் 15 ஆயிரம்', '15 முதல் 20 ஆயிரம்' என்று ஒரு ரேஞ்ச் வைத்துக்கொள்வது நல்லது.

தொலைபேசி மூலமாக அவர்கள் இன்டர்வியூ செய்யும்போது, கூடவே ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ள கையில் பேனா மற்றும் காகிதத்துடன் தயாராக இருங்கள். ஏனென்றால், நீங்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கிறீர்களா என்பதைச் சோதிக்கவே, அது நடத்தப் படும்!

இன்ஃபர்மேஷனல் இன்டர்வியூ

முதல் வகை நேர்காணலுக்கு நேர் எதிரான முறை இது. தங்கள் நிறுவனத்தில் தற்சமயம் வேலை காலி இல்லை என்ற நிலை இருந்தாலும், நீங்கள் விண்ணப்பித்து இருந்தால், உங்களை ஒரு சந்திப்புக்கு அழைப்பார்கள். அந்த சந்திப்பில் உங்களுக்குத் தெரிந்ததையும், அவர்களுக்குத் தெரிந்ததையும் பரிமாறிக்கொள்வீர்கள். உங்களுக்கு குறிப்பிட்ட அந்த துறையைப்பற்றி என்ன தெரியும், அந்த துறையில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை எல்லாம் நிறுவனத்தினர் அறிந்துகொள்ளவே இந்த முறை நேர்காணல் பின்பற்றப்படுகிறது.

சில டிப்ஸ்கள்...

துறை சார்ந்தும், நிறுவனம் சார்ந்தும் என்னஎன்ன கேள்விகள் கேட்கலாம் என்பதை முதலிலேயே ஒரு ஹோம் வொர்க் செய்துகொண்டுபோவது நல்லது.

ரெஃபரன்ஸ்கள் அளிக்கும்பட்சத்தில் முன்னமே அவர்களுக்குத் தெரியப்படுத்திவிட்டு, அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது நலம். இதனால் நேர் காணல் செய்பவருக்குச் சுலபமாக இருக்கும்.

உங்களின் ரெஸ்யூம், விசிட்டிங் கார்டு போன்றவற்றைக் கொடுப்பது மூலம் அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

சந்திப்புக்குச் சென்று வந்தவுடன் ஒரு நன்றி தெரிவிக்கும் கடிதமோ, மெயிலோ அனுப்புவது நல்லது.

டைரக்டிவ் ஸ்டைல் இன்டர்வியூ

ப்படித்தான் நேர்காணல் செய்யப்போகிறேன் என்று எந்தவிதத் திட்டங்களும் முடிவுகளும் இல்லாமல் நடக்கும் நேர்காணல் முறை. இங்கு நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடன் வந்திருக்கும் மற்ற போட்டியாளர்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நேர்காணல் செய்வார்கள். உங்களுக்குக் கேட்கப்பட்ட அதே கேள்வி மற்றவரிடமும் கேட்கப்பட வேண்டும் என்ற நியதி இல்லையெனினும், எல்லோரிடமும் ஒரே கேள்வியை முன்வைக்கும்போது நீங்கள் அனைவரும் தருகிற பதில்களை அப்போதே ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். கொஞ்சம் கடினமாகவே இந்த முறை நேர்காணலின்போது நடந்துகொள்வார்கள். இதனால் அவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்க வேண்டாம். ஆயினும் இன்டர்வியூ செய்பவர் உங்கள் மேற்பார்வையாளர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சில டிப்ஸ்கள்...

நேர்காணல் செய்பவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர் தரும் லீடுக்கு ஏற்பச் செயல்படுவது உசிதம்.

எந்த ஒரு நிலையிலும் நேர்காணல் உங்கள் கையை மீறிப் போய்விடாதபடிக்குக் கவனமாக இருங்கள். நேர்காணல் செய்பவர் உங்களிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காதபோது மிகவும் மென்மையாக இடைமறிக்கவும். ஒரு விண்ணப்பதாரராக உங்களின் 'சுப்பீரியாரிட்டி'யைக் காட்ட வேண்டிய இடம் இது.

ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ

ங்களின் பொறுமையைச் சோதிக்கவே இந்த வகை நேர்காணல் நடத்தப்படும். நீங்கள் சொல்கிற எந்த ஒரு தகவலுக்கும் எந்த விதமான எதிர்வினையும் காட்டாமல் இருப்பது, முறைத்துப் பார்ப்பது, செய்ய முடியாத காரியங்களைச் செய்யச் சொல்வது என கிட்டத்தட்ட ஒரு கல்லூரி ராகிங் போன்றது இந்த இன்டர்வியூ. எந்த கஷ்டத்திலும் நீங்கள் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இதன் அடிநாதம். நீங்கள் 'ரெஸ்பான்ஸிவ்' ஆக இருக்கிறீர்களா... அல்லது 'ரியாக்டிவ்' ஆக இருக்கிறீர்களா என்பது இங்கு முக்கியம். காரணம், முன்னது, வேலைக்குச் சரியான ஆள் என்பதைத் தெரிவிப்பது. பின்னது, தகுதியில்லைஎன்பதைத் தெரிவிப்பது.

சில டிப்ஸ்கள்...

இது ஒரு விளையாட்டுதானே தவிர, பெர்சனலாக உங்களை அவமதிக்கும் செயல் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

நிதானமாக இருங்கள். படபடப்போ, பயமோ இருந்தால் நீங்கள் சொல்ல வருவது சரியாகப் போய்ச் சேராது.

பிஹேவியரல் இன்டர்வியூ

நீங்கள் குறிப்பிட்ட ஒரு பணிக்கு மனதளவிலும், நடத்தை அளவிலும் தகுதியானவரா என்பதை ஆராய இந்த வகை நேர்காணல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணத்துக்கு, தரம் சம்பந்தப்பட்ட ஒரு வேலைக்கு கடினமான ஒரு நபரைத் தேர்வு செய்வார்கள். காரணம், தரத்தில் காம்ப்ரமைஸ் செய்யக் கூடாது. மனித வளத் துறையில் 'பீப்பிள்-ஓரியன்டட்' ஆக இருக்க வேண்டும். அங்கே கடினமாக இருப்பது வேலைக்கு ஆகாது. உற்பத்தித் துறையில் 'பெர்ஃபெக்ட்' எதிர்பார்க்கப்படும். மார்க்கெட்டிங் துறையில் விட்டுக்கொடுத்துப் போக வேண்டி இருக்கும். ஆகவே, அப்படிப்பட்ட நபர்களைத் தேர்வு செய்வார்கள். இந்த வகை நேர்காணல்களில் படிப்பு என்பதைவிட, உங்கள் நடத்தைதான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும்.

சில டிப்ஸ்கள்...

நீங்கள் நீங்களாக இருங்கள். நடிக்க வேண்டாம்.

படிக்கும்போதும், முன்னர் பார்த்த வேலையின்போதும் நீங்களாக மேற்கொண்ட சில முனைப்புகளை எடுத்துக் கூறுங்கள். அவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சமூக நலன் சார்ந்ததோகூட இருக்கலாம்.

உங்களின் அனுபவங்களை 'வளவள' என்று அளக்க வேண்டாம். இரண்டு நிமிடங்களுக்குள் பேசி முடிப்பது நல்லது.

இன்டர்வியூவுக்குப் போனோம்... வந்தோம்... அதோடு நம் வேலை முடிந்தது என்று இருக்காமல், தொடர்ந்து அந்த நிறுவனத்தை ஃபாலோ-அப் செய்வது, உங்களின் நிலைபற்றி அறிந்துகொள்வது, நீங்கள் தேர்வு பெறாவிட்டாலும் இன்டர்வியூவில் நீங்கள் செய்த தவறுகள் என்ன, அதை எப்படித் திருத்திக்கொள்வது என்பன போன்றவற்றை எல்லாம் நேர்காணல் நடத்தியவருடன் விவாதித்து அலசுவது உங்கள் மீதான ஒரு நன்மதிப்பை உயர்த்தும்!

இன்டர்வியூவில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பயிற்சிகள் நடத்திக்கொண்டு இருக்கிற காலத்தில் இன்டர்வியூவை எப்படி நடத்த வேண்டும் என்று பாடம் எடுத்து வரும் 'கெம்பா' கார்த்திகேயன் மேலும் சில வகையான இன்டர்வியூ வகைகளைப்பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். "நார்மலான சூழ்நிலையில் எல்லோரும் சமமாக, நல்லவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அப்நார்மலான சூழ்நிலையில் நீங்கள் எப்படி மாறுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே 'ஸ்ட்ரெஸ்', பிஹேவியரல் போன்ற இன்டர்வியூக்கள் நடத்தப்படுகின்றன. காரணம், உங்களின் உண்மையான குணம் இதில் வெளிப்பட்டுவிடும்.

குரூப் இன்டர்வியூ

ற்றவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதை அறிய இந்தக் குழு நேர்காணல் நடத்தப்படுகிறது. அதிகம் வாதாடக் கூடியவரா, மற்றவர்களுக்கு வாய்ப்புத் தருபவரா என்று இது கிட்டத்தட்ட ஒரு குழு விவாதம்போலவே நடைபெறும். குழுவாகச் செயலாற்றும்போது நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை இதன் மூலம் அறிய முடியும் என்பதால் கவனம் தேவை.

சில டிப்ஸ்கள்...

நேர்காணல் நடத்துபவர் உங்களிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்துகொள்ளவும்.

மற்ற விண்ணப்பதாரர்களை மரியாதையுடன் நடத்துங்கள்.

அதிகாரம் செலுத்துவது உங்களைப் பக்குவம்அற்ற மனிதராகக் காட்டிவிடும்.

டேக் டீம் (Tag Team) இன்டர்வியூ

ரே சமயத்தில் பலர் உங்களை அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டு உங்களைத் திணறவைப்பார்கள். சில நிறுவனங்களில் ஒருவரிடம் இன்டர்வியூ முடிந்தவுடன், அடுத்தவரிடம் இன்டர்வியூவுக்குச் செல்ல வேண்டும். யார், எப்படிக் கேள்விகேட்டாலும் நீங்கள் சமநிலை தவறாமல் இருக்கிறீர்களா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்வார்கள்!

சில டிப்ஸ்கள்...

ஒவ்வொருவரையும் மிக முக்கியமான நபராகக் கருதுங்கள். பர்சனாலிட்டியைவைத்து எடை போட வேண்டாம்.

அனைவருக்கும் பொதுவாக வணக்கம் வைக்கவும். தனித் தனியாக வணக்கம்வைத்தால் நேரம் வீணாகும். இது குழுவாக உங்களை நேர்காணல் செய்யும்போது மட்டும்.

ஒருவரிடம் நிறுவனத்தைப்பற்றி கேள்வி கேட்கையில் அவரைச் சிக்கலிலோ, முகச் சுளிப்பையோ ஏற்படுத்துகிற சூழலில் தள்ளிவிட வேண்டாம்.

மீல் டைம் இன்டர்வியூ

'சும்மா சாப்பிடுங்க பாஸ்' என்று நேர்காணல் செய்பவர் உங்களை பிஸ்கட்டோ, கேக்கோ அல்லது டிபனோ கொடுத்து நீங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் எதாவது ஒரு கேள்வி கேட்பார். பதில் சொல்ல வேண்டுமே என்று நீங்கள் பதறுவீர்கள். சாப்பிடவும் வேண்டும், அதே சமயம் பதிலும் சொல்ல வேண்டும் என்கிற அந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களின் சாமர்த்தியம் நிர்ணயிக்கப்படும்.

மேலும், பல பர்சனலான விஷயங்களைப் பேசவும் இந்த மீல் டைம் இன்டர்வியூ மேற்கொள்ளப்படும். 'ஹெட் ஹன்டிங்' எனப்படும் ஏற்கெனவே ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பவரைத் தங்கள் நிறுவனத்துக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்க, இந்த வகை நேர்காணல்கள் கார்ப்பரேட் உலகில் மிகப் பிரபலம்!

சில டிப்ஸ்கள்...

இந்த வகை இன்டர்வியூக்களின்போது உங்களை ஒரு விருந்தினராகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் சாப்பிட ஆரம்பிக்கும் முன் நீங்கள் சாப்பிடா தீர்கள். அதே போன்று அவர் சாப்பிடாமல் இடைவெளி விடும்போது நீங்களும் இடைவெளி விடுங்கள்.

டயட் போன்ற விஷயங்களை இங்கே எடுத்து வர வேண்டாம். அவர் எதை ஆர்டர் செய்கிறாரோ, அதை எடுத்துக்கொள்வது நல்லது. அவர் ஆர்டர் செய்தது உங்களுக்குக் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும் என்கிறபட்சத்தில் அதை மென்மையாகத் தவிர்க்கவும். உங்களை ஆர்டர் செய்யச் சொன்னால், ரொம்ப ஹெவியாக இல்லாமல் 'லைட்'டாக ஆர்டர் செய்யவும்.

உணவு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவிக்க மறக்க வேண்டாம்.

ஃபாலோ-அப் இன்டர்வியூ

மேற்கண்ட இத்தனை வகை இன்டர்வியூக்களிலும் தேறிவிட்ட பிறகும் 'ஷார்ட் லிஸ்ட்' செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இடையே யார் சிறந்தவர் என்று முடிவெடுக்க இந்த இன்டர்வியூ நடத்தப்படும். எந்த ஓர் அலட்சியமும் இல்லாமல் முதல் நாள் இன்டர்வியூவுக்கு எந்த அளவு ஆயத்தமாகச் சென்றீர்களோ அதே அளவு தயாரிப்புகளுடன் இந்த ஃபாலோ-அப்புக்கும் செல்லுங்கள். நிறுவனத்தின் கல்ச்சர் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள இது உதவியாக இருக்கும்.

சில டிப்ஸ்கள்...

உங்களின் நிலையைத் தைரியமாக, தெளிவாகச் சொல்லவும்.

சம்பளம்பற்றிப் பேசுகையில் உடும்புப் பிடியாக இருக்க வேண்டாம்.

இறுதியாக ஒரு விஷயம்... இன்டர்வியூவுக்கு தயார்படுத்துவது என்பது அரை மணி நேரத்தில் ஒரு பெண்ணை மயக்குவது போன்றது அல்ல. உண்மையைச் சொல்லப்போனால் உங்களை இன்டர்வியூவுக்கு யாரும் தயார்படுத்த முடியாது. இயற்கையிலேயே தன்முனைப்பும், நம்பிக்கையும் இருந்தால் அது நேர்காணலில் பிரதிபலிக்கும். நடிப்பதை விட்டுவிட்டு நிஜமாக இருங்கள். நீங்கள் ஜெயிப்பீர்கள்!

 

 

 

 




100 பூக்கள்


பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா கூறும் 100 பூக்கள் கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள் ....

 
வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,  70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,  75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,  80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,  85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,  90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,  95
இந்த பூக்கள் எப்படி இருக்கும் ... இந்த பூக்களின் புகைப்படம் மற்றும் 'scientific name'
இதோ இங்கே ..... யாரும் இதுவரை செய்திடாத ஒரு புதிய முயற்சி ...

படித்ததில் ரசித்தது




நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. 
மெலிதாய் காற்று வீசிக் கொண்டிருந்தது. காற்றைக் கண்டதும் 'அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தி 'ஐயோ காற்று வீசுகிறது , நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்து விட்டது. 

அன்பு என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் 'காற்றை எதிர்க்க முடியாது என்று அணைந்து விட்டது.

'அறிவு' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது. 

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் சில நொடிகள் போராடி ஜெயித்து விட்டது.

அப்போது அங்க ஒரு சிறுவன் நுழைந்தான் அவன் 'அடடா 3 மெழுகுவர்த்தியும் அணைந்து விட்டதே என்று கவலையுடன் சொன்னான். அதற்க்கு எரிந்து கொண்டிருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது 'வருத்தப்படதே நான் இருக்கிறேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துக்கொள் . என்றது.. 
சிறுவன் உடனே உன் பெயர் என்ன என்று கேட்டான் நம்பிக்கை என்றது மெழுகுவர்த்தி. 


எல்லா ஷாஜகான்களும்
தயாராகத்தான்
இருக்கிறார்கள்...
ஒரு தாஜ்மஹாலை கட்டுவதற்கு...
ஆனால் மும்தாஜ்கள்
நல்ல வசதியான
இன்ஜீனியர்களை
தேடிக்கொண்டு
இருக்கிறார்கள்
கட்டுவதற்கு..!

உங்களிடம் உள்ளதா துடிப்பும் துள்ளலும்?


நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, உங்களிடத்தில் என்ன இருக்கிறதோ அவற்றைக்கொண்டு உங்களால் என்ன செய்ய முடியுமோ... அதைச் செய்யுங்கள்!' என்பார் ரூஸ்வெல்ட். ஆளுமைத் திறன் என்ற வார்த்தைக்கு இதுதான் மிகச் சுருக்கமான விளக்கம்!பள்ளி-கல்லூரி மாணவர், வேலை தேடும் யுவதி, முதல் நாள் வேலைக்குச் செல்லும் இளைஞன், இரண்டு வருடக் காதலை வெளிப்படுத்த முனையும் காதலன், புரமோஷனுக்குக் காத்திருக்கும் நடுத்தர வயதினர், தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், பேரன்-பேத்திகளிடம் தனது இமேஜ் வளர்க்க விரும்பும் தாத்தா- பாட்டி என எல்லோருக்கும் எங்கேயும் எப்போதும் ஆளுமைத் திறன் தேவை! கிட்டத்தட்ட நமது 95 சதவிகிதச் செயல்கள் நம் பழக்கவழக்கங்களை மட்டுமே அடிப்படையாகக்கொண்டவை. நம் பழக்க வழக்கங்களைத் தன்னிலை உணர்ந்த செயல்கள் (Automatic Conditioned Response)என்பார்கள். பழக்கவழக்கங்கள் என்பது வேறு, திறன்கள் என்பது வேறு. பழக்கம் பிறப்பில் இருந்தே வருவது. உதாரணமாக... இடது கைப் பழக்கம். திறன்கள் நாமாக வளர்த்துக்கொள்வது. ஓவியம் வரையைக் கற்றுக் கொள்வது.

உன்னை நீ அறிவாய்!

"ஆளுமை மேம்பாட்டின் வளர்ச்சியில் ஒரு சிறு பகுதிதான் மென்திறன்கள் எனப்படும் சாஃப்ட் ஸ்கில்ஸ். மற்றவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்வது, சீரான உடைகளைத் தேர்வு செய்து அணிவது, உணவு அருந்தும் விதம், மற்றவர்களையும் தன்னைப்போல நினைக்கும் எம்பதி (Empathy) போன்ற மென்திறன்களை வளர்த்துக் கொண்டாலே நம் ஆளுமை சீர் பெற்றுவிடும். உங்கள் நேர்முகத் தேர்வின் வெற்றி 53% உங்கள் உடல் மொழியாலும், 40% நீங்கள் பேசும் முறையாலும், குரலில் தொனிக்கும் ஆர்வம் ஆகியவையாலும், 7% மட்டுமே பேசும் வார்த்தைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. நீங்கள் இருக்கையில் அமரும் முறையை வைத்தே, நீங்கள் அந்த வேலைக்குத் தகுதியானவர்தானா என்பதைத் தேர்வு நடத்துபவரால் தீர்மானித்து விட முடியும்!" என்கிறார் மனித வள நிபுணரும், பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கேம்பஸ் இன்டர்வியூ தொடர்பான பயிற்சி வகுப்புகளில் அடிக்கடி இளைஞர்களைச் சந்தித்து வரும் ராமன்.

வார்த்தைகளுக்கு வேலை இல்லாத இடங்களில் அல்லது பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காத சமயங்களில், உங்கள் எண்ணங்களை மற்றவர்களுக்குப் புரியவைக்க உடல் மொழிதான் சிறந்த வழி.

நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன் கண்ணாடி முன் நின்று பயிற்சி எடுப்பது நல்லது.

மீண்டும் மீண்டும் ஒரே செய்கையை வெளிப்படுத்த வேண்டாம். அது பார்ப்பவர்களுக்கு 'போர்' அடிக்கும்.

உங்கள் உடல் மொழி ரொம்பவும் இயற்கையாக இருக்கட்டும். ஒத்திகை செய்ததை வெளிப்படுத்துவதுபோல இருக்க வேண்டாம்.

எதிரே இருப்பவரின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.அவர் கள் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

உடல் மொழியைப் பொறுத்த வரையில் உங்கள் மனதில் என்ன இருக்கிறதோ, அது உங்கள் அசை விலும் தெரியும். ஆகவே, நேர்மை யாக இருங்கள்.

அமர்ந்திருக்கிறீர்களோ அல்லது நின்றிருக்கிறீர்களோ, உங்களின் உடல் மொழி ரிலாக்ஸ்டாக இருக்கட்டும். சட்டைப் பொத்தான்களுடன் விளையாடுவது, இடுப்பில் கைவைத்து நிற்பது போன்ற கோமாளித்தனங்கள் வேண்டாம்!

ஐ-கான்டாக்ட், கைகுலுக்கல்கள், குரல் ஏற்ற இறக்கங்கள், இவையெல்லாம் மிகச் சரியாகக் கையாளப்பட வேண்டும்.

விருந்து வித் வி.ஐ.பி!

ஆளுமைத் திறன் என்றதும் தகவல் தொடர்புத் திறன், உடல் மொழி, ஆடை நாகரிகம், தனி மனிதப் பண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் உணவு அருந்தும் 'டேபிள் மேனரிஸம்' என்பதில் அக்கறை காட்டுகிறோம்? தினமும் மூன்று வேளை உணவருந்தும் பழக்கம்கொண்டவர்கள் நாம். அந்தச் சமயங்களிலும் ஸ்கோர் செய்ய டிப்ஸ் தருகிறார் கோவை காருண்யா பல்கலைக்கழக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் ஆன்ட்ரூ ஃபிராங்க்ளின் பிரின்ஸ்.

உணவு மேஜை மீது தட்டு, கரண்டி போன்றவற்றால் ஒலி எழுப்பாதீர்கள். அது அநாகரிகமான பழக்கம்.

வாய் நிறையச் சாப்பாட்டுடன் பேசாதீர்கள். ஒன்று, பேசிவிட்டுச் சாப்பிடுங்கள். அல்லது, சாப்பிட்டவுடன் பேசுங்கள்.

உங்கள் உதடுகளை மூடிக்கொண்டு உணவை மெல்லுங்கள்.

சாப்பாட்டை அள்ளி வாயில் கொட்டிக்கொள்ளாதீர்கள். கொஞ்சமாக, நிதானமாகச் சாப்பிடுங்கள்.

சாப்பிட்டவுடன் கைகளில் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களை நக்குவது, பல்லிடுக்கில் நோண்டுவது போன்றவை அருகில் இருக்கும் யாருக்கும் அருவருப்பை ஏற்படுத்தும்.

யாரேனும் சாப்பிடும் முன் நீங்கள் சாப்பிடாதீர்கள். நீங்கள் ஏற்பாடு செய்த விருந்தென்றால், உங்கள் விருந்தினர் சாப்பிடத் துவங்கும் வரை நீங்கள் ஆரம்பிக்காதீர்கள். நீங்கள்தான் விருந்தாளி என்றால், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்து சிக்னல் வரும் வரை சாப்பிட வேண்டாம்.

விருந்துகளில் பெண்களுடன் சாப்பிட நேரும்போது, ஆண்கள் அவர்களுக்கு முதலில் பரிமாற வேண்டும்.

அடிக்கடி மற்றவர்களின் சாப்பாட்டுத் தட்டையோ அல்லது டேபிளையோ கவனிக்காதீர்கள். அது உங்கள் மீது ஒரு கீழ்த்தரமான எண்ணத்தை ஏற்படுத்திவிடும்.

ஒரே சமயத்தில் நிறைய உணவை உங்கள் தட்டில் கொட்டிக்கொள்ளக் கூடாது. கட்டாயப்படுத்திச் சாப்பிட வைத்தால் 'ஸாரி' என்று மென்மையாகத் தவிர்த்துவிடுங்கள்.

முன் பின் அறிமுகம் இல்லாத இடங்களில் கரண்டி, முள் கரண்டி, கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தத் தெரியாமல் அல்லல்பட வேண்டாம்.

நிறுவனப் பணிப் பண்பாடு (Corporate Etiquette)

'Knowing is knowledge, Doing is skill' என்பார்கள். அப்படியான ஸ்கில் நிரம்பியவர்களைத்தான் இன்றைய கார்ப்பரேட் உலகம் வரவேற்கிறது. நிறுவனப் பணிப் பண்பாட்டுத் திறன்களை எப்படி வளர்த்துக்கொள்வது என்று கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனித வளத் துறை இயக்குநர் மற்றும் கார்ப்பரேட் டிரெய்னர் கவிதாசன் வழி சொல்கிறார்.

வெற்றி நோக்கிய உங்கள் பயணம், எவ்வளவு மெதுவானதாக இருந்தாலும், ஏதோ ஒரு முன்னேற்றம் அதில் இருக்க வேண்டும். ஒரு அலுவலகத்தில் வேலைக்குச் சேரும்போது, ஒருவர் குமாஸ்தாவாகச் சேர்வது அவரது தவறு கிடையாது. ஆனால், அவர் குமாஸ்தாவாகவே ஓய்வு பெற்றால், அது நிச்சயம் அவருடைய தவறுதான்.

நீங்கள் எவ்வளவு ஜாலி பேர்வழியாக இருந்தாலும், உங்கள் வேலையில் யாரும் உங்களைக் கேள்வி எழுப்பவோ, குறை கூறவோ முடியாதவராக இருங்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால், உங்கள் வேலை பாதிக்கப்பட்டால், அது ஒரு திறமையான ஊழியருக்கு அழகு அல்ல.

சக ஊழியர்களோடு ஈகோ பிரச்னை இருந்தாலும், அவற்றால் உங்கள் வேலை பாதிக்கப்படாமல் இருந்தால், நிர்வாகத்துக்கும் உங்கள் மேல் நம்பிக்கை ஏற்படும்.

அலுவலகத்தில் சிறியவரோ, பெரியவரோ, நமக்குத் தெரியாத விஷயத்தை யார் கூறினாலும், ஆர்வத்தோடு அதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு பொறுப்பான பதவியில் இருந்தால், அந்தப் பதவிக்கான மரியாதை உங்கள் செயல்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.

புதியவர்களை வழிநடத்துங்கள். யார் நன்றாக வேலை செய்தாலும், மனம் திறந்து பாராட்டுங்கள். பாராட்டு, உங்களை மற்றவர்கள் மேல் கனிவும், அக்கறையும் உள்ளவராகக் காட்டும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் சிரித்த முகத்தோடு இருங்கள். கண் பார்த்துப் பேசுங்கள். அலுவலக நேரம் போக மற்ற நேரங்களில் நீங்கள் எல்லோருக்கும் நல்ல நண்பன்தான் என்று உங்கள் செயல்களில் காட்டுங்கள்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அலுவலக கிசுகிசு (gossip) பேசாதீர்கள். அது, உங்களது கேரக்டரையே சிதைக்கக்கூடிய பழக்கம். உங்களை நம்பிக்கைக்குரியவராக அந்தக் குணம் என்றுமே அடையாளம் காட்டாது.

செல் போனால் சொல் போச்சு!

"இன்று உலகத்தை உங்களுடன் இணைக்கும் முக்கியமான மீடியம் செல்போன். உலகத்துக்கு உங்களைப்பற்றிய 'பிராண்ட் இமேஜ்' ஏற்படுத்துவதில் செல்போனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ஆனால், நம்மவர்கள் மிக மோசமாகப் போங்கு வாங்குவது செல்போன் நாகரிகம் இல்லாமல்தான். பெரும்பாலான சமயங்களில் உங்கள் தோற்றம், திறமை குறித்து அறியாதவர்கள் உங்களுடனான ஒற்றைத் தொலைபேசி உரையாடல் மூலம், உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டியிருக்கலாம். எனவே, உங்கள் தொலைபேசி நாகரிகத்துக்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுங்கள்!" என்கிறார் ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளர் பிரபு.

கல்லூரி முடிந்து இன்டர்வியூ அல்லது வர்த்தகம் தொடர்பான அழைப்புகளுக்குக் காத்திருப்பவராக இருந்தாலோ, உங்கள் காலர் ட்யூன் தேர்வில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களுடன் 'ஹலோ' சொல்வதற்கு முன்னரே, உங்கள் காலர் டோன்தான் உங்களைப்பற்றிய ஒரு இமேஜ் ஏற்படுத்தும். 'வாடி வாடி நாட்டுக்கட்டை', 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா' என்று அல்லுசில்லு டோன்கள் உங்களுக்கு 'தரை டிக்கெட்' என்ற பட்டத்தை வழங்கிவிடும்!

காலர் டோன் விஷயத்தில் பெண்களும் அதீதக் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் காதலன் அல்லது கணவனுக்குப் பிடிக்குமே என்று 'கலாபக் காதலா!' என்று ஒலிக்கவிட்டிருப்பீர்கள். ஆனால், உங்களை அழைக்கும் அத்தனை ஆண்களும், நீங்கள் அழைப்பை ஏற்கும் வரை தான்தான் உங்கள் கலாபக் காதலன் என்ற கற்பனையில் திளைத்துக்கொண்டு இருக்கலாம். உஷார்!

நீங்கள் ஒருவரைத் தொடர்பு கொள்ளும்போது, உங்கள் அழைப்பு 'கால் வெயிட்டிங்'கில் இருந்தால், உடனே இணைப்பைத் துண்டியுங்கள். எதிர் முனையில் அவர் ஏதேனும் முக்கியமான தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருந்தால், உங்கள் அழைப்பு ஏற்படுத்தும் 'பீப் பீப்' ஒலி நிச்சயம் உங்கள் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கும்!

கால் வெயிட்டிங் வந்தாலோ அல்லது உங்கள் அழைப்பு அட்டென்ட் செய்யப்படவில்லை என்றாலோ, உடனே மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருக்காதீர்கள். 'நான் இன்னார். இன்ன விஷயம் தொடர்பாகப் பேச விரும்புகிறேன்!' என்ற ஒரு வரி மெசேஜ் அனுப்பிக் காத்திருங்கள்.

பொது இடங்களில் ஸ்பீக்கர் போனில் பேசுவது, லவுட்ஸ்பீக்கரில் பாட்டு கேட்பது போன்றவை இங்கிதமான பழக்கமல்ல.

மருத்துவமனை, கோயில்கள், துக்க நிகழ்வுகள் போன்ற இடங்களில் தவறாமல் மொபைலை சைலன்ட் மோடுக்கு மாற்றுங்கள். அவசியமான அழைப்பென்றாலும், மெதுவாகப் பேசி, பிறகு அழைப்பதாகக் கூறுங்கள்.

எதிர்முனையில் பேசுபவர் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு பேச ஆரம்பியுங்கள்.

அச்சுப்பிச்சு அலறல் ரிங்டோன்களை வைத்து, சுற்றியிருப்பவர்களைத் திகிலூட்டாதீர்கள்.

அலுவலகத்துக்கு என ஒலி குறைந்த புரொஃபைல்களை ஃபிக்ஸ் செய்துகொள்வதன் மூலம், உங்களுக்கு வரும் அழைப்புகள் மற்றவர் கவனத்தைக் கலைக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

24X7 தொடர்புக்குத்தான் அலைபேசிகள். ஆனால், 24X7 ம் அழைத்துக்கொண்டே இருந்தால், அவை அலர்ஜி பேசிகளாகிவிடும் என்பதை மறக்காதீர்கள்!

ஆள் பாதி ஆடை பாதி!

"நமது பெர்சனாலிட்டியைப் பிரதிபலிப்பதில் பெரும்பங்கு வகிப்பது, நாம் அணியும் ஆடைகள். நல்ல தரமான ஆடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். பளீர் நிறங்களைத் தவிர்த்து, மென்மையான நிறங்களையே உடுத்துங்கள். நடக்கும்போதும் நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்களுக்குச் சௌகரியமாக இருக்கிறதா என்று கவனியுங்கள். நிறைய நகைகள் அணிந்துகொள்ள வேண்டாம். உங்கள் முக அமைப்புக்கு ஏற்ற, ஹேர்ஸ்டைலைத் தேர்ந்தெடுங்கள். பொதுவாக, இன்றைய மாடர்ன் பெண்கள் புரொஃபஷனல் காரணங்களுக்காக நீளமான கூந்தலை விரும்புவது இல்லை. ஆனால், ஒழுங்காகப் பராமரிக்கப்படும் நீளமான கூந்தலும் அழகாக உங்கள் கடமையுணர்ச்சியைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். இவற்றையெல்லாம்விட முக்கிய விஷயம், பெர்ஃப்யூம் பற்றியது. அழுத்தமான நெடியடிக்கும் வாசனைத் திரவியங்களைத் தொடவே வேண்டாம். நேர்முகத் தேர்வின்போது, மோசமான பெர்ஃப்யூமால் வேலைவாய்ப்பு பறிபோனவர்கள் எல்லாம் உண்டு. சென்ட், பெர்ஃப்யூம் போன்றவற்றைவிட டியோடரன்ட் நல்ல பலனைத் தரும்!" என்று ஃபேஷன் டிப்ஸ் தருகிறார் ஃபேஷன் டிசைனர் தபு.

ஒல்லி ப்ளஸ் உயரமான உடல்வாகுகொண்டவர்கள் நீளவாக்கில் கோடுகள் போட்ட உடைகளைத் தவிர்த்து, அகலவாக்கில் கோடுகள் உள்ள உடைகளை உடுத்தலாம். ஃபுல் ஸ்லீவ் உடைகள், கான்ட்ராஸ்ட் நிறங்கள் இவர்களுக்கு அழகாகப் பொருந்தும். ஸ்லீவ்லெஸ் உடைகளைத் தவிர்ப்பது நலம். காட்டன் உடைகள் இவர்களுக்குக் கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும்.

கொஞ்சம் குள்ளமாக, ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் ஒரே நிறத்திலான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவர்களுக்குப் பெரும்பாலும், கழுத்துப் பகுதி அழகாக இருக்கும் என்பதால், அதை எடுப்பாகக் காட்டும் காலர் நெக் வகை உடைகளை அணியலாம்.

உயரமான, சற்றே குண்டான உடல்வாகுகொண்ட பெண்கள், அடர்த்தியான நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே விதமான பேட்டர்ன் உள்ள உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது, உடலைக் கொஞ்சம் ஸ்லிம்மாகக் காட்டும். டைட் ஃபிட்டிங் உடைகள், காலர், ஃப்ரில் போன்றவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.

குள்ளமான, குண்டான உடல்வாகு உடையவர்கள் பெரிய டிசைன்கள், ஸ்லீவ்லெஸ், ஃபுல்ஸ்லீவ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒரே நிறத்திலான உடைகள், நீளவாக்கில் கோடு போட்ட டிசைன்கள் இவர்களுக்கு நன்றாக இருக்கும்.

மாடர்ன் தோற்றம் தரும் என்றாலும், அலுவலகம், கல்லூரி போன்றவற்றுக்கு இறுக்கமான உடைகள் அணிந்து செல்வது, மரியாதைக்குரியவர் என்ற இமேஜை உங்களுக்குத் தராமல் போகலாம். அதனால், இந்த விஷயத்தில் கவனம் தேவை