rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

100 பூக்கள்


பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா கூறும் 100 பூக்கள் கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள் ....

 
வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,  70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,  75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,  80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,  85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,  90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,  95
இந்த பூக்கள் எப்படி இருக்கும் ... இந்த பூக்களின் புகைப்படம் மற்றும் 'scientific name'
இதோ இங்கே ..... யாரும் இதுவரை செய்திடாத ஒரு புதிய முயற்சி ...

படித்ததில் ரசித்தது




நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. 
மெலிதாய் காற்று வீசிக் கொண்டிருந்தது. காற்றைக் கண்டதும் 'அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தி 'ஐயோ காற்று வீசுகிறது , நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்து விட்டது. 

அன்பு என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் 'காற்றை எதிர்க்க முடியாது என்று அணைந்து விட்டது.

'அறிவு' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது. 

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் சில நொடிகள் போராடி ஜெயித்து விட்டது.

அப்போது அங்க ஒரு சிறுவன் நுழைந்தான் அவன் 'அடடா 3 மெழுகுவர்த்தியும் அணைந்து விட்டதே என்று கவலையுடன் சொன்னான். அதற்க்கு எரிந்து கொண்டிருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது 'வருத்தப்படதே நான் இருக்கிறேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துக்கொள் . என்றது.. 
சிறுவன் உடனே உன் பெயர் என்ன என்று கேட்டான் நம்பிக்கை என்றது மெழுகுவர்த்தி.