rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

முரண்பாடு !!!

முரண்பாடு !!!

கால்கடுக்க வரிசையில் நின்று ..
கடைசியில் .....
கண்மூடி கடவுள் தரிசனம் !!!...

எத்தனை ஜாதி மாதம் இனம் ...
இருந்தாலும் ...
இறந்தபின் ஒரே இனம் ..???
பொணம் !!!...


நந்தினி ஹோட்டல் - பகல் கொள்ளை ....

நேத்து நானும் எனது நண்பனும் HOTEL NANDHINI @ Domuloor ...போயிருந்தோம்.. Half தந்தூரி சிக்கன்  பார்சல் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம்...ரெண்டு பேர் தான எதுக்கு முழு தந்தூரி ஆர்டர் பண்ணனும் என்று Half மட்டும் தான் ஆர்டர் செய்தோம்....வந்த பின் தான் தெரிந்தது பகல் கொள்ளை எப்படி எல்லாம் அடிகரஅணுக என்று..கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது Half தந்தூரி சிக்கனாம் ....அதுவும் இதன் விலை 145 Rs.....
என்ன கொடுமை சார் இது...இந்த டயலாக் தான் எங்களுக்கு நியாபகம் வந்தது ...நான் இதை தட்டி கேட்கலாம் என்று சொன்னேன் ..என் நண்பன் தான் இதை நாம் நம்மால் முடிந்தவரை உலகுக்கு தெரிய படுத்துவோம் அது தான் சரியாக இருக்கும் என்று சொன்னான்...இதோ செய்து விட்டேன் அதை ...

நண்பர்களே ..இனிமேல் யாரும் நந்தினி ஹோட்டல் செல்வதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு பின் செல்லுங்கள்... எங்களை போல் நீங்களும் மனம் வருந்த தேவை இல்லை..




--
Thanks 

Madeswaran N
Ring : 9620966601


UNIX  BITES    A play boy..Just Time pass
  





     



Windows 1.0 to 8



 
1985  Windows 1.0



The First Version of Microsoft Windows, Windows 1.0, with simple applications and the concept of multitasking on PC


1987  Windows 2.0




The Second Version of Windows, Windows 2.0 with some fixes and the Control Panel.


1988  Windows 2.1




The Second Version of Windows with some additions, and some fixes, Windows 2.1, the Paint software is seen in this one!


1990  Windows 3.0




The Third Version of Windows, Windows 3.0, featuring the File Manager and Program Manager, replacing the old MS DOS based File and Program Managers.


1992  Windows 3.1





The later released upgraded version of Windows 3.0, which had support for 32-bit Disk Access, Personalization options and had the Minesweeper game for the first time.


1995  Windows 95




Windows 95, the changed look, the new interface and the beginning of the form of Windows which we see now. Enhanced Graphics and better Communication Programs.


1998  Windows 98




Windows 98, one of the most successful versions of Windows till now, this version of Windows can still be seen in some PCs even today. With Extended Softwares, better Performance, this Version was the first milestone in the path of the development of Windows.


2000  Windows ME




Windows ME or Windows Millenium Edition, though not a very popular version of Windows, but still it had some better tools and performance than the previous ones in some cases.


2001  Windows XP




Windows XP, the Daddy of all versions of Windows, the most popular version of windows even today. Windows XP is still used today because of its unmatched performance, tools and interface. This has been the best version of Windows till the arrival of Windows 7.


2006  Windows Vista




Windows Vista, though it didn’t go so well in the public, but still its a good version of Windows specially for the interface the Windows Aero™ Effect, making the Window Transparency work like magic.


2009  Windows 7




Windows 7, the best version of Windows till date. With the new and advanced features such as the Superbar, this version of Windows created another milestone for Microsoft after Windows 98 and Windows XP. Windows 7 features an unbeatable user interface, and powerful tools that makes it the best among the rest.


2012  Windows 8





Windows 8, to be released in the late 2012. The interface of Windows 8 as seen at the D9 Conference. A better version of Windows as proposed by Microsoft, with the changed User Interface.


விரயம் தவிர்க்க விவரமான பட்ஜெட் - கரெக்ட் ரேட்டில் கட்டலாம் வீடு!




டுத்தர மக்களின் வாழ்நாள் கனவு சொந்தமாக ஒரு வீடு கட்டுவது. இந்த கனவை நனவாக்குவதில் சிக்கலாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான். சிக்கல் நம்பர் ஒன், எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை. குறைந்தபட்சம் ஆறேழு வருடங்களுக்கு முன்பு நிலம் வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்தான். நீங்கள் வாங்கிய நிலத்தின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு பெருகி இருப்பதைப் பார்த்து நீங்களே உங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அன்றைக்கு வாங்கத் தவறியவர்கள் இன்று வாங்க நினைத்தால் அதைவிட பல மடங்கு பணம் கையில் இருக்க வேண்டும்.
 சிக்கல் நம்பர் டூ, மணல், ஜல்லி, சிமென்ட் போன்ற கட்டடம் கட்டத் தேவையான பொருட்களின் விலை வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் கொண்டிருப்பது. மணல் விலை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சென்னையில் இருக்கும் விலை வேறு; நெல்லையில் இருக்கும் விலை வேறு. செங்கல்லின் கதையும் அதேதான். இவை தவிர, கட்டடம் கட்டுபவர்களுக்கான கூலியும் பாரதூரமாக மாறுகிறது.
இப்படி சந்துக்குச் சந்து கட்டடம் கட்டுவது தொடர்பான அத்தனை விஷயங்களும் வெவ்வேறாக இருக்க, புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் ஏகத்துக்கும் குழம்பித்தான் போவார்கள்.

''என் பக்கத்து வீட்டுக்காரர் கட்டுற அதே அளவுக்குத்தான் நானும் வீடு கட்டுறேன். ஆனா, என்னைவிட கம்மியாத்தான் அவரு செலவு பண்றாரு. நான்தான் ஏமாந்துட்டேன்'' என்று புலம்புவர்கள் ஒருபக்கம்...
''எட்டு லட்ச ரூபாய்க்குள்ள வீடு கட்டி முடிச்சுடலாம்னு நெனைச்சு ஆரம்பிச்சேன்... இன்னைக்கு பன்னிரண்டு லட்சத்தைத் தாண்டிடுச்சு'' என்று புலம்புவர்கள் இன்னொரு பக்கம்... ஆக மொத்தத்தில், இன்றைக்கு கரெக்ட்-ஆன செலவில் வீடு கட்டுவது எப்படி என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. உள்ளபடி ஆயிரம் சதுர அடி வீடு கட்ட எவ்வளவு பணம் செலவாகும்? கான்ட்ராக்ட் முறையில் வீடு கட்டப் போவதாக இருந்தால் எவ்வளவு தரலாம்? ஃபிளாட்-ஆக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்? என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் கோடி புண்ணியமாகப் போகும் என்கிறீர்களா?
இதோ உங்களுக்காகவே சரியான செலவில் வீடு கட்ட சூப்பர் மாடல் பட்ஜெட்... ஒவ்வொரு இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு விலை இருந்தாலும் இந்த பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஓரளவு சரியான விலைதான் நாம் கொடுக்கிறோமா என்பதை செக் செய்து கொள்ளலாம்...
வீடோ, ஃபிளாட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பில்டர் அல்லது புரமோட்டர்கள் பல்வேறு டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி நம்மை குழப்ப வாய்ப்பிருப்பதால், முதலில் சில விஷயங்கள் பற்றி நமக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம்.
கார்பெட் ஏரியா
நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவு. அதாவது, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா.
பிளின்த் ஏரியா
கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்ந்தது.
சூப்பர் பில்ட் அப் ஏரியா
பிளின்த் ஏரியா அளவில் 15% முதல் 20% அதிகரிப்பது சூப்பர் பில்ட் அப் ஏரியா. இந்த பரப்புக்குதான் விலை சொல்வார்கள். பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றின் அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட்அப் ஏரியா கணக்கிடப்படும்.
யூ.டி.எஸ்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, அந்த மனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதை குறிப்பது. 'பிரிக்கப்படாத மனைப் பரப்பு' (Undivided Share) என்று கிரய பத்திரத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். (யூ.டி.எஸ். எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை பெட்டிச் செய்தியில் பார்க்க!)
மேற்சொன்ன இந்த நான்கு விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், உங்களுக்குத் தேவையான அல்லது உங்களுக்கு கிடைக்கப் போகும் கட்டடத்தின் அளவு தெரிந்துவிடும். இனி, இந்த கட்டடம் கட்ட என்னென்ன பொருட்கள் தேவைப்படும்? அதன் விலை என்ன? என்பதைப் பார்ப்போம்...
என்ன செலவாகும்?
ஆயிரம் சதுர அடி பிளின்த் ஏரியா கட்டடம் கட்ட சுமார் 15 லட்ச ரூபாய் செலவாகும். (ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவாகும் என்பது மேலே தனியாகக்  கொடுக்கப் பட்டுள்ளது.)
சொல்லப்பட்ட கணக்கி லிருந்து விலைவாசி உயர்வைப் பொறுத்து மணல், செங்கல், சிமென்ட், கம்பி மற்றும் இதர பொருட்களின் விலை 2% முதல் 3% வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த கணக்குபடி ஒரு சதுர அடி கட்ட சுமார் 1,500 ரூபாய் ஆகிறது. இது பில்டர்கள் கட்டுவதற்கான செலவு. நீங்களே முன்நின்று கட்டும்போது 1,400 ரூபாயிலிருந்து 1,350 ரூபாய் வரை குறைய வாய்ப்பிருக்கிறது. முதல் தரமான பொருட்களை வாங்குவதாக நினைத்தே இந்த கணக்கு போடப்பட்டுள்ளது. சென்னையைவிட மதுரை, சேலம், திருநெல்வேலியில் மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை குறைவு என்பதால், செலவு இன்னும்கூட குறைய வாய்ப்பிருக்கிறது.
நாம் வாங்கும் ஒரு பிளாட்டின் விலை ஓரளவு நியாயமானதாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்ற விஷயத்துக்கு இப்போது வருவோம்... உதாரணமாக நீங்கள் சென்னை தாம்பரத்திற்கு அருகில் ஒரு ஃபிளாட்டை வாங்குவதாக முடிவு செய்கிறீர்கள். அந்த ஃபிளாட்டின் விலை ஒரு சதுர அடி சுமார் 3,000 ரூபாய் என்று பில்டர் சொல்கிறார்... நீங்கள் வாங்கப்போகிற ஃபிளாட்டின் சூப்பர் பில்ட் அப் ஏரியா 952 ச.அடி. என்றும் உங்களுடைய யூ.டி.எஸ். 555 ச.அடி. என்றும் அவர் சொல்கிறார்.
ஆனால், நம் கணக்குப்படி எவ்வளவு செலவு ஆகும் ஃபிளாட்டின் விலை எவ்வளவு வரும் என்று பார்க்கலாம்...
அங்கு மனை விலை ஒரு சதுர அடி 1,400 ரூபாய் என்று விசாரித்தபோது நமக்குத் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்... அடுத்து கட்டுமானச் செலவு எவ்வளவு ஆகும் என்று பார்க்கலாம்... நாம் முன்பு கணக்கிட்டபடி ஒரு சதுர அடி 1,400 ரூபாய் எனும்பட்சத்தில் 952 ச.அடிக்கான கட்டுமானச் செலவு 13,32,800 ரூபாய் வரும். அதேபோல் 555 சதுர அடி மனைக்கான விலை (சதுர அடி விலை 1,400 ரூபாய்) 7,77,000 ரூபாய் ஆகும். ஆக, மொத்தம் 21,09,800 ரூபாய் ஆகும்.
இந்த கணக்கின்படி பார்த்தால் ஒரு ச.அடிக்கான விலை சுமார் 2,220 ரூபாய் வருகிறது. இதற்கு மேல் பில்டர் சொல்லும் விலை அவரது லாபமாகும். ஒருவேளை அவர் 20% லாபம் வைத்தால் சதுர அடி 2,660 ரூபாய் என்று வைத்து விற்பார். ஒருவேளை அவர் பத்திரிகை மற்றும் டி.வி-களுக்கு விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்து, மேலும் புராஜெக்ட்டுக்கு கடனும் வாங்கி இருந்தால், கடனுக்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்ப்பார். அந்த வகையில் அவர் சுமார் 2,900-3,000 ரூபாய் வரை சொல்ல வாய்ப்பிருக்கிறது.  
கவனிக்க வேண்டியவை..!
கட்டிய வீட்டை வாங்கும்போது!
* தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750-800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600-650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.
* எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப்  ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.
ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30-35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.
* அடுக்குமாடி குடியிருப்பு களில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.  
* காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.
* தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு!  
* வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.  
சொந்தமாக வீடு கட்டும்போது..!
* செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.
* கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10-15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாககூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும்.  





CEO's (of J.P Morgan) Fantastic reply to a Pretty Girl

CEO's (of J.P Morgan) Fantastic reply to a Pretty Girl
 
MIND BLOWING THOUGHT PROCESS!!!
 
A young and pretty lady posted this on a popular forum:
Title: What should I do to marry a rich guy?
 
I'm going to be honest of what I'm going to say here. I'm 25 this year.
I'm very pretty, have style and good taste. I wish to marry a guy with $500k annual salary or above. You might say that
I'm greedy, but an annual salary of $1M is considered only as middle class in New York . My requirement is not high.
Is there anyone in this forum who has an income of $500k annual salary? Are you all married? I wanted to ask: What
should I do to marry rich persons like you? Among those I've dated, the richest is $250k annual income, and it seems that
this is my upper limit. If someone is going to move into high cost residential area on the west of New York CityGarden (?),
$250k annual income is not enough.
 
I'm here humbly to ask a few questions:
 
1) Where do most rich bachelors hang out? 
(Please list down the names and addresses of bars, restaurant, gym)
2) Which age group should I target?
3) Why most wives of the riches is only average-looking? I've met a few girls who doesn't have looks & are not interesting,
   but they are able to marry rich guys
4) How do you decide who can be your wife, & who can only be your girlfriend?
   (my target now is to get married)
 
Ms. Pretty
 
Awesome reply:
 Dear Ms. Pretty,
 
I have read your post with great interest. Guess there are lots of girls out there who have similar questions  like yours. Please allow me to analyse your situation as a professional investor. My annual income is more than $500k, which meets your requirement, so I hope everyone believes that I'm not wasting time here. From the standpoint of a business person, it is a bad decision to marry you. 
 
The answer is very simple, so let me explain.

Put the details aside, what you're trying to do is an exchange of "beauty" and "money": Person A provides beauty, and Person B pays for it, fair and square. However, there's a deadly problem here, your beauty will fade, but my money will not be gone without any good reason. The fact is, my income might increase from year to year, but you can't be prettier year after year. Hence from the viewpoint of economics, I am an appreciation asset, and you are a depreciation asset. It's not just normal depreciation, but exponential depreciation. If that is your only asset, your value will be much worried 10 years later.
 
By the terms we use in Wall Street, every trading has a position, dating with you is also a "trading position".

If the trade value dropped we will sell it and it is not a good idea to keep it for long term - same goes with the marriage that you wanted. It might be cruel to say this, but in order to make a wiser decision any assets with great depreciation value will be sold or "leased". Anyone with over $500k annual income is not a fool; we would only date you, but will not marry you. I would advice that you forget looking for any clues to marry a rich guy.
And by the way, you could make yourself to become a rich person with $500k annual income. This has better chance than finding a rich fool.
 
Hope this reply helps.
 
signed,
CEO
J.P. Morgan

ஆயில் புல்லிங் (OIL PULLING)

ஆயில் புல்லிங் (OIL PULLING) எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில்
பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று
அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும்
தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள்
கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ
முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான்
நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய
கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல்
பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு
பெறுகிறது.

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும்
ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில்
927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி
குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும்,
இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில்
தெரிவித்திருந்தனர்.

நிரூபிக்கப்பட்ட உண்மை

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய்
, புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு,
மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற
எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித
குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர்,
டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

வலி நிவாரணி

தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான
விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த
நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான
நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை,
ஆஸ்துமா,
வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

எப்படி செய்வது ஆயில் புல்லிங்

காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ,
ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி
லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின்
இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15
முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின்
தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும்.
15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும்.
அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது

உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க
வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம்
செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த
நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு
விடியற்காலை நேரமே சிறந்தது.

நாளொன்றுக்கு மூன்று முறை

எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித
பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக
இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை
குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.

ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின்
எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும்
பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில்
நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான்
இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர்
குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த
எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி,
அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால்
, நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.

.



ஒரு நிமிடம்

ஒரு நிமிடம் என்பது ஒரு யுகமாக தெரிகிறது !!!
காதலிக்காக மட்டும் அல்ல ...
ட்ராபிக் சிக்னலுக்காக காத்திருக்கும் போதும் கூட..!!


  




     





நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!...


நண்பர் ஒருவர் அனுப்பியிருந்ததைப் பகிர்ந்துகொள்கிறேன். நம்மில் பலர்
ஏற்கனவே படித்ததுதான். இருந்தாலும் மீண்டும் படிக்கும்போது ஒரு உறதி
ஏற்படுவதைக் காண்கிறேன்.


நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது...
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!...



ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த
நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள்
மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம்
உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே!
மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று
தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த
நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப்
பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து,
ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு
ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்;
மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள்
இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று
ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப
நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து,
முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள்
வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு
இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன்
செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா
செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட
அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு
அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,
புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி
வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே
செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

'' அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

'' பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில்
ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்;அவர்கள் கொடிய
விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்;காட்டைத் திருத்தி
உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள்,தொழிலாளர்கள்
சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை,அந்தப்புரம், சாலைகள் எல்லாம்
தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம்
சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி,குழந்தைகளுடன் சென்று அங்கே
வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்!
சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்!
உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு
இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே
வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி
பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக
திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும்
புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு
எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து
கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை
ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு
மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல்
படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம்
உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!
------------ --------- --------- --------- --------- --------- -------

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!


Beauty and complexity of the English language.


The beauty and complexity of the English language 

Professor Ernest Brennecke of Columbia is credited with inventing a sentence that can be made to have eight different meanings by placing ONE WORD in all possible positions in the sentence: 

"I hit him in the eye yesterday." 

The word is "ONLY"

The Message:

1.ONLY I hit him in the eye yesterday. (No one else did.)

2.I ONLY hit him in the eye yesterday. (Did not slap him.)

3.I hit ONLY him in the eye yesterday. (I did not hit others.)

4.I hit him ONLY in the eye yesterday. (I did not hit outside the eye.)

5.I hit him in ONLY the eye yesterday. (Not other organs.)

6.I hit him in the ONLY eye yesterday. (He doesn't have another eye..)

7.I hit him in the eye ONLY yesterday. (Not today.)

8.I hit him in the eye yesterday ONLY. (Did not wait for today.)



This is the beauty and complexity of the English language.

கலைஞரின் "எவண்டி உன்ன பெத்தான்[Remix]..


 

 


மொட்டை


குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை. 

ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது? 

இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். இவையெல்லாம் எமது உடம்பில் எவளவு ஊறியிருக்கும்.

வெறும் ஐந்து நிமிடம் கடல்நீரில் விரலை வைத்து துடைத்து விட்டு சுவைத்து பாருங்கள் எமது விரல் அப்போதும் உப்பாகத்தான் இருக்கும். 5நிமிடம் உப்பு நீரில் வைத்த விரலே இப்படியென்றால் பத்து மாதம் மலம் சிறுநீர் இரத்தம் சதை இவற்றுக்குள் கிடந்த எமது உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும். 

இதெல்லாம் எப்படி வெளியேறும்?? எமது உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் மயிர்கால்கள் வழியாக வெளியேறும். தலையில் உள்ள கழிவுகள் வெளியேற வழிகள் குறைவு. இதனால் சிரசில் அந்தக் கழிவுகள் தேங்கி நிற்கும் சந்தர்பங்கள் ஏற்படுகிறது. இதனால் பிற்காலத்தில் பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. 

எனவேதான் சிரசில் மொட்டை போடுவது நேர்த்திக்கடன் என்ற பெயரில் முன்னோர்களால் பரப்பப்பட்டது. இதைப்போல் மீண்டும் ஒரு தடவை குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள். 

அது ஏற்கனவே மொட்டை போடும் போது ஏதாவது கிருமிகள் தவறியிருப்பின் இரண்டாவது மொட்டையில் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே. 

தற்போது புரிகிறதா பிறந்த குழந்தைக்கு கோயிலில் மொட்டை போடுவது ஏன் என்பது. இது தொடர்பாக அறிவியல் ரீதியாக கூறினால் மக்கள் பின்பற்றமாட்டார்கள் என்பதற்காகத்தான் ஆன்மீகரீதியாக கூறி மக்களை பின்பற்ற வைத்துள்ளனர் முன்னோர்கள். 

ஆனால் அதற்கு ஆன்மிக ரீதியிலான வேறு ஒரு விளக்கத்தினையும் குறிப்பிட்டுள்ளனர். எது எப்படியே ஆன்மிகத்தில் கூறப்பட்ட பல்வேறு காரியங்களுக்கு அறிவியல் ரீதியிலான விளக்கங்கள் இருக்கின்றது என்பதே உண்மை.




ஊடல்





 
Join Only-for-tamil
காதல் மனைவியுடன் தொடர்ந்து சண்டை..
எப்போதும் தோல்வி..

வெறுத்துப்போனான் கணவன்...


சண்டை போடுவதும்..பின்பு கூடுவதும்
வழக்கமாகி போனது.

அன்றும் அப்படித்தான்..
Join Only-for-tamil

வழக்கம் போல் பெரும் சண்டை..
மனைவி வேலைக்கு சென்றுவிட்டாள்..

வீட்டில் தனியே புலம்பிகொண்டிருந்த
கணவன் கண்ணில்..
சுவரில் தொங்கிகொண்டிருந்த
மனைவியின் புகைப்படம்
தென்பட்டது..

அருகில் இருந்த பழம் வெட்டும் கத்தியை
கோபத்தோடு படத்தின் மீது எறிந்தான்..
Join Only-for-tamil

கத்தி படத்தின் மீது படவில்லை...குறி தவறியது..

தொடர்ந்து எறிந்தான்..எல்லாம் குறி தப்பியது..

எதிர்பாராதவிதமாக மனைவியிடம் இருந்து
போன் வந்தது...

"என்னங்க செய்துகிட்டு இருக்கீங்க?"

ரொம்ப விரக்த்தியோட சொன்னான் கணவன்..
"ரொம்ப மிஸ்" பண்ணுறேன்"

"Me too dear" என்றாள் மனைவி..


 


  




     





ஒரு நல்ல நிர்வாகி





நல்ல நிர்வாகி

ஒரு முன்னணி நிறுவனத்திற்கு மேலாளர் பதவிக்கு நபர் தேவை என்று நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வந்தது. தகுதியும் திறமையும் வாய்ந்த இளைஞன் ஒருவன் அந்தப் பதவிக்கு விண்ணப்பித்தான்.

அனைத்து தகுதிகளும் இருந்தபடியால் அனைத்து சுற்றுக்களிலும் சுலபமாக பாஸ் செய்துவிட்டான். இறுதி சுற்று வந்தது. நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனரே (CMD) நேரடியாக இம்முறை இன்டர்வ்யூ செய்ய வந்திருந்தார்.

அந்த இளைஞனின் ரெஸ்யூமை பார்த்தபோது, ஒரு விஷயத்தை அவர் கண்டுபிடித்தார். பள்ளிக் கல்வி முதல், பல்கலைக் கழக ஆராய்ச்சி வரை அனைத்திலும் அந்த இளைஞனின் மார்க்குகள் அபாரமாக இருந்தது.

"நீ படிப்பதற்கு கல்வி நிறுவனத்திடம் ஏதாவது ஸ்காலர்ஷிப் பெற்றாயா?"

"இல்லை" என்றான் அந்த இளைஞன்.

"அப்போ உனக்கு ஃபீஸை எல்லாம் யார் கட்டினது? உன் அப்பாவா?"

"இல்லை. அவர் என் சின்ன வயசுலயே காலமாயிட்டார். என் அம்மா தான் என்னை படிக்க வெச்சாங்க."

"உங்கள் அம்மா என்ன வேலை பாக்குறாங்க?"

"என் அம்மா எங்க தெருவுல இருக்குற வீடுகளுக்கு, துணிகளை துவைச்சு சலவை செய்து கொடுக்குறாங்க"

உடனே, அந்த இளைஞனின் கைகளை காண்பிக்குமாறு CMD பணிக்க, அவன் ஏதும் புரியாது கைகளை காட்டுகிறான். அந்த கைகள் மிருதுவாக பூப்போல இருந்தன.

"உங்க அம்மாவுக்கு அவங்க வேலைகள்ல எப்பாவாச்சும் நீ உதவியா இருந்திருக்கியா?"

"இல்லை. என் அம்மா அதை விரும்பமாட்டாங்க. என் கைகள் எப்பவுமே புஸ்தகத்தை மட்டுமே சுமக்கனும்னு சொல்வாங்க. நான் மேலும் மேலும் படிக்கணும். அதுவே அவங்களுக்கு போதும்னு சொல்வாங்க. அதுமட்டுமில்லாம, என் அம்மா என்னை விட வேகமா துணிகளை துவைப்பாங்க."

"சரி… உன்கிட்டே ஒன்னு கேட்டுக்குறேன். இன்னைக்கு நீ வீட்டுக்கு போனவுடன், உங்க அம்மாவோட கைகளை சுத்தம் பண்ணு. அதற்க்கப்புறம் என்னை நாளைக்கு வந்து பாரு…!"

சரியென்று சொல்லிவிட்டு அவன் வீட்டுக்கு கிளம்பினான். வேலை கிடைககும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாக நினைத்துக்கொண்டே வீட்டுக்கு சென்றான்.

வீட்டுக்கு திரும்பியவுடன், "அம்மா உன் கையை காட்டு. நான் கொஞ்சம் அதை வாஷ் செய்துவிடுறேன்" என்றான் மிகவும் சந்தோஷமாக.

அந்த தாய்க்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பக்கம் மகனின் இந்த திடீர் நடவடிக்கை புதிராகவும் இருக்கிறது. கைகளை மகனிடம் தயங்கியபடியே நீட்டுகிறார்.

உழைத்து உழைத்து ஓடாய்  தேய்ந்துபோன, தன் தாயின் கைகளை அந்த இளைன்ஞன், மெல்ல சுத்தம் செய்கிறான். அப்படி செய்யும்போது அவன் கண்களில் இருந்து கண்ணீர் அரும்புகிறது. அது அந்த கைகளில் துளித் துளியாய் விழுகிறது. இப்போது தான் முதன் முறையாக தன் தாயின் கைகளை அவன் கவனிக்கிறான். அந்த கைகளில் தோல் சுருங்கிப் போய், ஆங்காங்கே தோலுரிந்து, அதனால் ஏற்பட்ட காயங்களை. தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும்போது, வலி தாங்காமல் அந்த கைகள் லேசாக நடுங்குகிறது. அந்தளவு சில காயங்கள் சற்று கடுமையாக இருந்தது.

இப்போது தான் முதன் முறையாக அந்த இளைஞன் உணர்ந்துகொள்கிறான். அந்த கைகளால் தான் தன் தாய் தினந்தோறும் பல வீட்டு துணிகள் துவைத்து தன்னை ஆளாக்கினாள் என்று. தன்னை படிக்கவைக்க, பட்டம் வாங்க வைக்க, தன் தாய் கொடுத்த விலை தான் அந்த காயங்கள் என்று இளைஞன் புரிந்துகொள்கிறான்.

அமாவின் கைகளை சுத்தம் செய்த பிறகு, எதுவும் பேசாது மீதமிருந்த துணிகளை தானே துவைக்கிறான்.

அன்றைய இரவு தாயும் மகனும் நீண்ட நேரம் பேசிக்கொள்கின்றனர்.

அடுத்த நாள் CMD கூறியபடி அவரை பார்க்க செல்கிறான்.

அவனுடைய கண்களில் நீர்த்துளிகளை பார்த்தார் CMD. "நேற்று உன் வீட்டில் என்ன நடந்தது நீ என்ன கற்றுக்கொண்டாய் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?" என்று கேட்டார்.

"நான் என் அம்மாவின் கைகளை சுத்தம் செய்தேன். பிறகு எஞ்சியிருந்த துணிகளை நானே துவைத்தேன்"

"குட். உன்னோட உணர்வுகளை சொல்லு…"

"முதலாவது – பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, பாராட்டுவது என்றால் என்ன என்று தெரிந்துகொண்டேன். என்னுடைய அம்மா மட்டும் இல்லை என்றால், இன்றைக்கு நான் இல்லை. ரெண்டாவது – அம்மாவுடன் அவரது வேலையை பகிர்ந்துகொண்டு அவருக்கு உதவியபடி அதை செய்ததில், ஒரு விஷயத்தை செய்து முடிப்பது எத்துனை கடினம் என்று புரிந்துகொண்டேன். மூன்றாவது – என் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு நான் மதிப்பளிப்பது, ஊக்கப்படுத்துவது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிந்துகொண்டேன்."

"இதை தான் நான் என் மேலாளரிடம் எதிர்பார்க்கிறேன். அடுத்தவர்களை மனம் விட்டு பாராட்டும் குணம் அவருக்கு இருக்கவேண்டும். பிறர் உணர்வுகளை, அவர்களது பணியின்  கடினங்களை அவர் புரிந்துகொள்ளவேண்டும். பணம் மட்டுமே வாழ்க்கையின் எல்லாம், பணம் சம்பாதிப்பது மட்டுமே லட்சியம் என்று நினைப்பவராக இருக்கக்கூடாது.  இந்த பிடி உன் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்." என்றார்.

அதற்க்கு பிறகு, அந்த இளைஞன் நன்றாக பணிபுரிந்து நல்ல பெயர் பெற்றான். அவனது டீமின் ஒவ்வொருவரும் உண்மையாக உழைத்து, நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை ஏற்படுத்தினர்.

நன்றாக பாதுகாக்கப்பட்டு, கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்கப்படும் ஒரு குழந்தைக்கு, ஒரு உரிமையான – தான் தான் முதலில் என்கிற  – மனோபாவம் வளர்ந்துவிடுகிறது. ஆகையால், தன்னை ஆளாக்க தன் பெற்றோர் எடுக்கும் முயற்சிகள், கஷ்டங்கள் அந்தக் குழந்தைக்கு தெரியாமலே போய்விடுகிறது. அவன் பிற்காலத்தில் வேலைக்கு சேரும்போது, எல்லோரும் தான் சொல்வதை கேட்க வேண்டும், தான் வைத்தது தான் சட்டம் என்று கருதக்கூடிய முரட்டுக் குணம் வந்துவிடுகிறது. அதுவும்  அவன் உயர்பதியில் வந்துவிட்டால், பிறரது கஷ்டங்களை முயற்சிகளை புரிந்துகொள்ளவே மாட்டான். அடுத்தவர் மீது எப்போதும் குற்றம் கூறிக்கொண்டே இருப்பான். இது போன்ற நபர்கள், கல்வித் தகுதியில் வேண்டுமானால் சிறந்து விளங்கலாம். வெற்றியும் அடையலாம். ஆனால் அந்த வெற்றி தற்காலிகமானதே. அவனுக்கு எதிலும் தான் ஜெயித்து விட்டோம் என்ற எண்ணமே வராது. அவன் உள்ளுக்குள் பொறாமையும், துவேஷமும் கொண்டு கருவிக்கொண்டே இருப்பான்.

உங்கள் குழந்தைகளுக்கு இப்படி கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து PROTECTIVE PARENTS ஆக இருந்து அவன் எதிர்காலத்தை பாழாக்காதீர்கள்.

உங்கள் குழந்தை வெள்ளி தட்டில் சாப்பிடலாம், கீபோர்ட் வாசிக்கலாம், நீங்கள் சிறுவயதில் அனுபவிக்க தவறிய சௌகரியங்கள் பலவற்றை அனுபவிக்கலாம். அவையெல்லாம் தவறல்ல. ஆனால், நீங்கள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது, அவர்களையும் சற்று ஊற்றச் சொல்லுங்கள். அவர்கள் சாப்பிட்ட பாத்திரங்களை அவர்கள் அம்மா, அக்கா, இவர்களோடு சேர்ந்து கழுவக் கற்றுக்கொடுங்கள். இந்த வேலைகளை செய்ய உங்களால் தனியாக வேலைக்காரர்களை அமர்த்த இயலாது என்பதால் அல்ல. அவர்கள் மீது நீங்கள் சரியான அன்பை செலுத்தவேண்டும் என்பதற்காக.

"வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். எனக்கென்று எதுவுமில்லை. கடவுள் எனக்கு அநீதி இழைத்துவிட்டார்" என்று நினைப்பவர்கள், ஒரு கணம் அவங்கவங்க பெற்ற அம்மாவை போய் பாருங்க. அவங்க மடி மீது தலை வெச்சு கொஞ்ச நேரம் சாஞ்சுக்கோங்க. அதுக்கு ஈடு இணை இந்த உலகத்துல எதையாவது உங்களால சம்பாதிக்க முடியுமா… இல்லை காட்ட முடியுமா?
  




     





நீதிக் கதைகள்

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், "கழுதையே வா!  நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்" என்றான்.

கழுதை, "நான் வரவில்லை. நீ ஓடு!" என்றது.

"ஏன் கழுதாய்?"

"எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?" என்றது.


நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே!


புதிய நீதிக் கதைகள் புத்தகத்தில் சுஜாதா

நீதிக்கதை..

சுஜாதா நீதிக்கதை


அந்த நாய்க்கு நல்ல குரல். குரைத்தால், கிராமமே குரைப்பது போல பெரிசாக சப்தம் கேட்கும். இதில் அதற்கு ரொம்ப் பெருமை. இதனால் கிராமத்தைச் சேர்ந்த கொல்லர் ஒருவர் அந்த நாயை விலைக்கு வாங்கினார். அது போகிறா வருகிறவரை யெல்லாம் பார்த்து, பலமாகக் குரைத்தததைக் கண்டு கொல்லானார் பெருமைப்பட்டார்.

ஒருமுறை கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவர் மகளைப் பார்த்து நாய் உற்சாகமாகக் குரைத்தது, துரத்தியது. அந்தப் பெண் தன் தந்தையிடம், "என்ன தலைவர் நீங்கள்? கிராமத்து கண்ட கண்ட நாய்களெல்லாம் என்னைப் பார்த்து குரைப்பதைப் தடுக்க முடியவில்லையே! " என்றாள்.

உடனே கொல்லரைக் கூப்பிட்டு, நாயைக் கட்டிப்போடும்படி சொன்னார்.

அவர் நாயை சங்கிலி கொண்டுவந்து ஒரு பெரிய மரத்துடன் இணைத்துக் கட்டிவிட்டார். நாயால் நகர முடியவில்லை. நாய் இதையும் பெருமையாக நினைத்ததுக் கொண்டு "பார்! நம் எஜமானர் என் திறமையை வியந்து மரத்தை இழுப்பதற்க்காகக் கட்டி போட்டிருக்கிறார்" என்று அதை இழுக்க முற்பட்டது. கிராமத்தவர் கைகொட்டிக் சிரித்தார்கள். நாய் அதை பாராட்டு என்று எண்ணிக்கொண்டு இன்னும் பலமாக இழுத்தது.

நீதி : சிலருக்கு எது தண்டனை, எது பாராட்டு எனபதே தெரியாது.

கும்மி..



 கும்மி...



லேடிஸ் பர்ஸ்ட்.
காதலி : ஏங்க.. எவ்வளவு நேரமா பீச்-லே உங்களுக்காக காத்துக் கிட்டிருக்கிறது? 


காதலன் : மன்னிச்சுக்க டார்லிங், நான் எப்பவும் பெண்களுக்கு மரியாதை குடுக்கறவன். அது உனக்கே தெரியும். லேடிஸ் பர்ஸ்ட். இதுதான் என் கொள்கை. நீ முன்னாடி வர்றதுக்கு நான்தான் காரணமாக இருந்திருக்கேன்* 

காதலி: பேச்சுல மட்டும் குறைச்சலில்லை..* 

காதலன் : நீ இப்படி கோபப்பட்டா கூட அதுவும் அழகாத்தான் இருக்கு* 

காதலி: கோபத்துல என்ன அழகு இருக்கு? 

காதலன் : கண்ணு படபடன்னு துடிக்குது பாரு. அதுவே ஓர்அழகுதான். 

சரி.. இந்தா சுண்டல்* 

காதலி: நீங்க சாப்பிடுங்க* 

காதலன் : நீதான் முதல்லே* லேடீஸ் பர்ஸ்ட்.* 

கண் சிமிட்டறதை வச்சே ஒருத்தருடைய உடல், மனநிலையையும் கண்டு பிடிக்கலாமாம். 

காதலி: அப்படியா? 

காதலன் : ஆமாம்* நரம்பியல் விஞ்ஞானிகள் சொல்றாங்க. கண் சிமிட்டறது குறைச்சலா இருந்தா மனது சந்தோஷமாக இருக்குன்னும், அதிகமாக இருந்தா உடம்பு, மனசுல வலி இருக்குன்னு அர்த்தம். அமெரிக்க ஜனாதிபதி புஷ் தேர்தல் பிரச்சார கூட்டத்துல பேசறப்போ எப்படியெல்லாம் அவர் கண்ணு துடிச்சதுங்கறதை ஒருத்தர் ஆய்வு பண்ணியிருக்கார். 

காதலி: பரவாயில்லையே* 

காதலன் : கண் சிமிட்டலை வச்சே நோயாளியின் வலியை புரிஞ்சக்கலாம். மூளைக் கோளாறுகளை கண்டுபிடிக்கலாம்.மனசுல என்ன விதமான கவலைங்கறதைக்கூட கண்டுபிடிக்கலாமாம். 

காதலி: சரி, அதெல்லாம் இப்ப எதுக்கு? 


காதலன் : காதலர்கள் அர்த்தமில்லாமே எதையாவது பேசிக்கிட்டிருப்பாங்கன்னு சொல்றது வழக்கம். நாம கொஞ்சம் அர்த்தத்தோடு பேசுலாம்னு பார்த்தேன். 

காதலி: நானும் அர்த்தத்தோடு ஒரு கேள்வி கேட்கிறேன். நம்ம கல்யாணம் எப்போ? 

காதலன் : இது என்ன கேள்வி. என்னோட கொள்கைதான் உனக்கு நல்லா தெரியுமே.. லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு *அதுக்கப்புறம் எனக்கு*

                             
                                                  ******************************** 

ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

''எங்கே இருந்து வருகிறாய்?'' என்று கேட்டார்கள்.

''தேவலோகத்திலிருந்து வருகிறேன்'' என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

''உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?''

''கடவுள்தான் அனுப்பி வைத்தார்.''

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.
இப்போது அவன் சிரித்தான்.

''ஏன் சிரிக்கிறாய்?''
''என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!''

''எப்படி எல்லாம் நடக்கும் என்று?''

''உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?''

மக்கள் யோசித்தார்கள்.

''சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?''

''நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.''

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

''நீ ஏன் சிரிக்கிறாய்?''

''நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!''

''எது பொய் என்கிறாய்?''

''கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!''

''அது எப்படி உனக்குத் தெரியும்?''

''நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!''

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ''நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.''

நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்? 



                                                   *****************************
ஏதாவது கல்யாணத்துக்கு போனா என் பாட்டிங்க, அத்தைங் யெல்லாம் கிண்டல் பண்ணுவாங்க "அடுத்து உனக்குதான்" அப்படின்னு. பயங்கரமா கேலி பண்ணுவாங்க. ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல.


                                                     *******************************


டெலிஃபோன் பில் அந்த மாசம் அதிகமாயிடுச்சுன்னு குடும்பத் தலைவர் மீட்டீங் போட்டார் ஒருநாள்....

அப்பா: இதை ஏத்துக்கவே முடியாது, நீங்க எல்லோரும் ஃபோனை அளவா பயன்படுத்தனும். நான் வீட்டில போனை யூஸ் பண்ணுறதே இல்லை. எல்லாம் ஆபீஸ் போன் மட்டும்தான்.

அம்மா: நானும் அப்படித்தான். நம்ம வீட்டு ஃபோனை அவ்வளவா யூஸ் பண்ணுறதே இல்லை. வேலைக்கான ஃபோனைதான் பயன்படுத்துவேன்.

பையன்: நானும்தான் நான் வீட்டு ஃபோனை யூஸ் பண்ணுறதே இல்லை. கம்பெனியில் கொடுத்த மொபைல் மட்டும்தான் எப்பவுமே யூஸ் பண்ணுவேன்.

வேலைக்காரி: அப்புறம் என்ன பிரச்சினை? நாம எல்லோருமே அவங்கவங்க வேலையில் இருக்கிற போனைத்தானே பயன்படுத்தறோம்!!!!.


                                                ***********************************

நன்றி : ஜோக்ஸ் கும்மி குருப்