rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

How to escape from Flight accident - an experience by the survivor?






உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ ,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான் தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் .

 

அண்மையில் நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின் பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும் மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார் மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது . அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை .

 

இனி எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் . இது குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2 மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும் முக்கியம் .

 

 

இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கின்றன . சிலவை தவிர்க்கமுடியாதாயினும் உயிர் பிழைக்கும் விகிதத்தை எம் இறுதி நேர நடவடிக்கைகளால் அதிகரிக்கலாம்.

 

எவளவு பெரிய விபத்தானாலும் ஒரு விமானம் முழுமையாக தீப்பிடித்து வெடித்து எரிவதற்கு 90 செக்கன்கள் ( 1 1/2 நிமிடங்கள் ) ஆகும். இது சர்வதேச தீ விபத்து பாதுகாப்பு மையத்தின் ஆய்வு அறிக்கை கூறும் தகவல் . அந்த 90 செக்கன்களையும் நாம் பயனுள்ள விதத்தில் பாவிப்பதிலேயே உயிர் பிழைக்கும் சந்தர்ப்பம் உண்டு .

 

நடை பெற்ற விபத்தில் இருந்து பிழைத்த உமர் பாரூக் கூறிய கருத்தின் படி பார்த்தால் முடிவெடுக்கும் சந்தர்ப்பம் அதிகம் . சில உயிர்கள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் ஏன் மற்றயவர்களால் எழுந்து வரமுடியவில்லை ??

 

"திடீரென விமானம் தள்ளாடியது. விமானத்தின் இறக்கை ஒன்று மலை மீது உரசியதை பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லாரும் அலறினோம்.சிறிது நேரத்தில் மலை மீது பலத்த சத்தத்துடன் விமானம் மோதியது. விமானம் முழுக்க தீ பிடித்தது. எங்கும் புகையாக இருந்தது."தைரியத்தை வர வழைத்துக்கொண்டு எழுந்து வெளியில் ஓடிவந்தேன். அடுத்த சில நிமிடங்களில் நான் இருந்த இடம் உள்பட விமானத்தின் பெரும் பகுதி வெடித்து சிதறியது."

 

I got caught in some cables but managed to scramble out

தான் இடையில் மாட்டிக்கொண்டதாக கூறியிருந்தார் உமர் . விமானம் எரிந்து தீப்பற்ற முதலே சிலரது உயிர்கள் பதற்றத்தால் செல்லும் வாய்ப்பு அதிகம் . மற்றும் பொருள்கள் ஏதாவது எதிர்பாராத விதமாக அடிபடும் . முக்கியமாக தலைப்பகுதியே முதலில் தாக்கப்படும் .

 

 

 

தலைப்பகுதி அடிபடுவதால் சிலர் முதலே மயக்கமடைவர் . தலைப்பகுதியை முன்னாள் இருக்கும் இருக்கையில் வைத்து படுக்க வேண்டும் . இதனால் முதல் சந்தர்ப்பத்தில் இருந்து பிழைக்கலாம் .

 

என் அருகில் இருந்தவர்கள் எல்லாரும் மயங்கி, சரிந்து கிடந்தனர். ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

 

பலரால் எழுந்து ஓடி வந்திருக்க முடியும் ஆனால் நெருப்பு எரிந்ததால் வந்த புகை அவர்கள் மயக்கத்திற்கு காரணம் . வரும் நெருப்பு புகை மேலாக தான் கூடுதலாக செல்லும். குறைவாக சுவாசிப்பதன் மூலமும் கீழே குனிந்து கொண்டு வெளியேறுவதன் மூலமும் அந்த மயக்கத்தை தவிர்க்கலாம் .இல்லாவிட்டால் ஈரமான துணியால் மூக்கை மூடிக்கொள்ளவும்

 

 

இந்த செயன்முறை உயிர் பிழைக்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் .

 

"நான் இருந்த பகுதியில் விமானம் இரண்டாக பிளந்து கிடந்தது. இதனால் வெளியில் செல்ல வழி கிடைத்தது." ஏன் அவரால் விரைவாக வெளியேறும் பகுதியை திறக்கம் முடியவில்லை? அவர் இருந்த இருக்கைக்கு அருகாமையில் தான் வெளியேறும் பகுதி இருக்கிறது . தான் விமானத்தின் பின் பகுதியில் இருந்ததாக கூறினார் .

 

 

அனைவரும் கட்டாயமாக விரைவாக வெளியேறும் பகுதி திறக்கும் முறையை அறிந்திருக்க வேண்டும். சில வேளைகளில் விமானம் எரியும் போது அதில் பணி புரிபவர்கள் கூட இறந்திருக்கலாம் . ஆகவே எமக்கு அதை திறக்க தெரிந்திருக்க வேண்டும் . இதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் .

நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் நமது பாதுகாப்பை மேலும் உறுதி செய்கின்றன .

 

 

கூடுதலாக விரைவாக வெளியேறும் கதவுக்கு அருகில் இருப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்புகள் மற்றும் விமானத்தில் பின்னால் இருப்பவர்கள் உயிர் பிழைக்கும் வீதம் 60 % ஆம்..

 

முக்கியமான தவறுகள்

 

விரைவான அதிர்ச்சி

அனைவரும் அதிர்ச்சியில் செய்வதறியாது தான் இருப்பார்கள். சிலர் கடவுளை வணங்குவர் . கண்களை மூடிக்கொண்டு இருந்து விடுவார்கள் . அடுத்த படியை யோசிப்பதில்லை . இது தான் உண்மை .

 

பொதிகளை கை விடாமல் இருத்தல்

 

முக்கியமாக எம்மவர்கள் பொதிகள் மீது கவனம் செலுத்தி அதை எடுத்துக்கொண்டு செல்ல முற்படுவர். பொதிகளை விட்டு விட்டு உடனடியாக வெளியேற மட்டுமே பார்க்க வேண்டும் . எந்த நேரத்தில் வெடிக்கும் என்பது கூற முடியாது . ஆனால் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்பது நிச்சயம் .

தயவு செய்து விமான பயணத்தில் குடிக்காதீர்கள் . அது உங்கள் செயல்ப்படும் திறனை இன்னும் குறைக்கும் .

 

விமான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கும் போது அலட்ச்சியம்

 

அனைத்திற்கும் காரணம் அலச்சியம். கூடுதலாக நாம் ஒருவரும் விமானம் புறப்படும் முன் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை . காரணம் எத்தனையோ தடவை கேட்டு விட்டோம் என்ற அலட்ச்சியம் . ஆனால் சில தகவல்கள் விமானத்துக்கு விமானம் வேறு படும் எனபதே உண்மை .

 

 

பாதுகாப்பு உறையை கூடுதலாக உடனே அணிய வேண்டும் ஆனால் விமானம் விழுந்தது நீர் பரப்பாக இருந்தால் விமானத்தை விட்டு உடனே குதிக்க தேவையில்லை .

 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து பார்த்தால் தான் தெரியும் என்பது சிலருடைய கருத்து . சிலருடைய கருத்து அந்த நேரம் என்ன செய்வதென்றே தெரியாது என்பதே . நாம் அதிர்ச்சியடைவதன் மூலம் உயிர் காப்பாற்றப்படப்போவதில்லை .உயிர் பிழைக்கும் விகிதம் மனதளவில் குறைக்கப்படும் . ஆனால் மன அழுத்தத்தை எதிர் கொண்டு விரைவாக செயல்ப்பட வேண்டும் . சில திடீர் வெடிப்புகள் தவிர்க்க முடியாது .







பாலக் பனீர்


சப்பாத்திக் கச்சேரிக்கு அருமையான பக்கவாத்தியம்.

பாலக் கீரை / பசலைக் கீரை - ஒரு கட்டு
பனீர் கட்டி - நூறு கிராம்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 5 பல்
இஞ்சி - சுண்டு விரல் நீளத் துண்டு ஒன்று
பச்சை மிளகாய் - 3
வெண்ணை (உப்பு போடாதது) - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
ஜீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா பொடி - 1 டேபிள் ஸ்பூன்
ரீபைண்டு எண்ணெய் - ஒரு பால் கரண்டி

பாலக் கீரையை நன்றாக அலம்பி சுத்தம் செய்து, வேக விட்டு மிக்சியில் குழைய அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஜாஸ்தி தண்ணீர் விட வேண்டாம்.

பன்னீரை க்யூப்-களாக / கொஞ்சம் நீளமாக நறுக்கிக் கொண்டு, நான்-ஸ்டிக் (அல்லது) இன்டாலியம் தவாவில் (தோசைக் கல்) வைத்து, ஒவ்வொன்றைச் சுற்றியும் துளித் துளியாய் எண்ணெய் விட்டு மிதமான தீயில் எல்லாப் பக்கமும் பொன்னிறமாகும் வரை மெதுவாக திருப்பி விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய்-இஞ்சி-பூண்டை நல்ல விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

வாணலியில் கடுகு ஜீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கிக் கொள்ளுங்கள்.

அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு, மீதி எண்ணெயை விட்டு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு மிளகாய் விழுது, உப்பு, எல்லாவற்றையும் போட்டு, பச்சை வாசனை போய், லேசாய் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

இதில் அரைத்து வைத்த பாலக் கீரையை போட்டு நன்றாக கலந்து விடவும்.

ஐந்து நிமிஷத்தில் கலவை நன்றாக இறுகி கொண்டு விடும். அப்போது அடுப்பை அனைத்து விட்டு, வறுத்து வைத்திருக்கும் பனீர் கட்டிகளை போட்டு, மெதுவாக திருப்பி விடவும்.

சூடாக இருக்கும் போதே, வெண்ணையை ஊற்றி லேசாக கலந்து வைக்கவும். சாப்பிட்ட அப்புறமும் அற்புதமான வாசைனைக்கும், வயிறும் மனசும் நிறைஞ்சிருக்கவும் நான் காரண்டி.

இதில் பெருங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி எல்லாம் தவறிக் கூட போட்டு விட வேண்டாம். இயல்பான மணத்தை கெடுத்து விடும்.

-- 

உங்கள் பிளாக்கர் சைட் மேப்பை கூகிள் தேடுபொறியில் இணைப்பது எப்படி?

உங்கள் பிளாக்கர் சைட் மேப்பை கூகிள் தேடுபொறியில் இணைப்பது எப்படி?

1
நமது வலைப்பூவிற்கு அதிக ஹிட்ஸ் வரவேண்டுமெனில் கூகிள் போன்ற பிரபல தேடுபொறி இயந்திரங்களில் பட்டியலிடப்பட வேண்டும். இது தானாகவே நடைபெறும் என்றாலும், தேடுபொறியில் நமது வலைப்பூவிற்கான ரிசல்டை அதிகரிக்க, நாம் நமது பிளாக்கரின் சைட் மேப்பை கூகிள் தளத்தில் இணைப்பது அவசியம். 

இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். இங்கு டாஷ்போர்டில் பக்க இறுதியில் உள்ள Tools and Resources பெட்டியில் உள்ள Webmaster Tools ஐ க்ளிக் செய்யுங்கள். 


Webmaster Tool ஐ enable செய்யக் கேட்டால் enable செய்து கொள்ளுங்கள்.
உள்ளே சென்ற பிறகு Add a Site பொத்தானை அழுத்துங்கள்.


இங்கு உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும். (http://suryakannan.blogspot.com/) இறுதியில் ஒரு '/' கொடுக்க மறவாதீர்கள். Verify செய்யச் சொல்லி வரும் வழிமுறையை செய்து விடுங்கள். பின்னர் Sitemaps பகுதியில் உள்ள Submit a Sitemap லிங்கை க்ளிக் செய்து,

அங்குள்ள பெட்டியில் கீழே உள்ள code ஐ பேஸ்ட் செய்யுங்கள்.

atom.xml?redirect=false&start-index=1&max-results=100
ஒருவேளை உங்கள் பிளாக்கில் 200 க்கும் மேற்பட்ட இடுகைகள் இருந்தால் 100 என்பதை 400 அல்லது  500   என மாற்றிக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கருக்கான சைட் மேப் கூகிள் தளத்தில் இணைக்கப் பட்டு விடும். 


http://suryakannan.blogspot.com/2010/05/blog-post_26.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+MyTamilTechBlog+%28%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AF%A7%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%29
--

thanks 

How to Recover Hacked Email Accounts ?

How to Recover Hacked Email Accounts?

 

For Gmail:


It can be a big disaster if your Gmail account has been compromised as it may be associated with several services like Blogger, Analytics, Adwords, Adsense, Orkut etc. Losing access to your Gmail account means losing access to all the services associated it with too. Here is a list of possible recovery actions that you can try.

Step -1: Try resetting your password since it is the easiest way to get your account back in action. In this process Google may ask you to answer the secret question or may send the password reset details to the secondary email address associated with your compromised account. You can reset you password from the following link

Gmail Password Reset Link

If you cannot find success from the Step-1 then proceed to Step-2.

 

Step-2: Many times the hacker will change the secret question and secondary email address right after the account is compromised. This is the reason for the Password Reset process to fail. If this is the case then you need to contact the Gmail support team by filling out the account recovery form. This form will ask you to fill out several questions like

1. Email addresses of up to five frequently emailed contacts
2. Names of any 4 Labels that you may have created in your account
3. List of other services associated with your compromised account
4. Your last successful login date
5. Account created date
6. Last password that you remember and many more…

You need to fill out this form as much accurately as possible. It is obvious to forget the dates of last login, account creation and similar terms. However you need to figure out the closest possible date/answers and fill out this form. This is your last chance! The more accurate the information filled out in the recovery form, the more the chances of getting your account back. You may reach the account recovery page form the following link

Account Recovery Form

 

 

For Gmail: https://www.google.com/support/accounts/bin/request.py?ara=1&hl=en&contact_type=ara&ctx=ara


காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

காதல் & கல்யாணம் 


ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
`

அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி
என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி
வரக் கூடாது. ''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, ''எங்கே உன்னைக் கவர்ந்த
உயரமான செடி? ''என்று கேட்டார். சீடன் சொன்னான், 'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி
என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள்
தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான
ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல்
போய் விட்டது.
`

' புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''
`

பின்னர் ஞானி,''சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப்
பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய
காந்திச் செடியா? ''சீடன் சொன்னான், 'இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை
விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப்
பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு
இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'
`

இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''
`

------------------------------ ------ஓஷோ