rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

படித்ததில் ரசித்தது




நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. 
மெலிதாய் காற்று வீசிக் கொண்டிருந்தது. காற்றைக் கண்டதும் 'அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தி 'ஐயோ காற்று வீசுகிறது , நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்து விட்டது. 

அன்பு என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் 'காற்றை எதிர்க்க முடியாது என்று அணைந்து விட்டது.

'அறிவு' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது. 

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் சில நொடிகள் போராடி ஜெயித்து விட்டது.

அப்போது அங்க ஒரு சிறுவன் நுழைந்தான் அவன் 'அடடா 3 மெழுகுவர்த்தியும் அணைந்து விட்டதே என்று கவலையுடன் சொன்னான். அதற்க்கு எரிந்து கொண்டிருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது 'வருத்தப்படதே நான் இருக்கிறேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துக்கொள் . என்றது.. 
சிறுவன் உடனே உன் பெயர் என்ன என்று கேட்டான் நம்பிக்கை என்றது மெழுகுவர்த்தி.