rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

தமிழக சட்டசபை தேர்தல் !! மீண்டும் ஏமாற தயாராகுங்கள்..!!!

மக்களே !!
வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் 19ம் தேதி வெளியிடப்படும். புதுச்சேரியிலும் இதே நாளில் தேர்தல் நடைபெறும்.
கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதியும் அசாமில் 2கட்டமாக ஏப்ரல் 4 மற்றும் 11ம் தேதிகளிலும் மேற்கு வங்கத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்18,ஏப்ரல் 23, ஏப்ரல் 27 மற்றும் மே 3 , மே 7 மே 10 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ம் தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26ம் தேதி. வேட்பு மனுக்கள் மீதான பரீசிலனை மார்ச் 28ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30ம் தேதியுடன் முடிகிறது.

தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் ஓட்டுக்கள் மே 13ம் தேதி எண்ணப்படுகின்றன.

இதனால எல்லோருக்கும் நான் சொல்றது என்னன்னா ...மறுபடியும் யாரையாவது  நம்பி ஓட்டு போட்டு ..ஏமாற தயாரா இருங்க..நம்ம தலை எழுத்தை யார் தான் மட்டற்ற முடியும் ???? என்ன நான் சொல்றது ...