வீரர்கள் உடனே கீழே இறங்கி அந்த கடும் இருளில் தடவிப் பார்த்து கிடைத்த கற்களை பைகளில் நிரப்பி எடுத்துச் சென்றனர்.மறு நாள் காலை அவர்கள் அந்தப் பைகளை எடுத்துப் பார்த்த போது அந்தக் கற்கள் அனைத்தும் வைரமாக இருப்பதைக் கண்டனர்.ஒரு பக்கம் அவர்களுக்கு வைரங்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி.அதே சமயம் இன்னும் கொஞ்சம் கொண்டு வராமல் போனோமே என்று வருத்தம்.அசரீரி சொன்னது உண்மையாயிற்று.
வாழ்க்கையில் கல்வி என்பது ஒரு பெரிய சொத்து.வாலிப வயதில் நாம் படிப்பதன் மூலம் நிறைய நல்ல விசயங்களைக் கற்றுக் கொள்கிறோம்.. ஆனால் வயதான பின் இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாமே என்று வருத்தப் படுகிறோம்
0 comments:
கருத்துரையிடுக